Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொட்டை தலை, மஞ்சள் சட்டை.. பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபா.. சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலியல் வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

Recommended Video

    Sivasankara Baba-வை CBCID கைது செய்தது எப்படி ? பரபரப்பு பின்னணி

    தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் புகார்களுக்கு எதிராக போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் தொடங்கி கிஷோர் கே சாமி, பப்ஜி மதன் எனப் பலருக்கு எதிரான நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    சிவசங்கர் பாபா

    சிவசங்கர் பாபா

    குறிப்பாக, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான நடவடிக்கையை போலீசார் துரிதப்படுத்தியுள்ளனர். கேளம்பாக்கம் அருகே ராமராஜ்ஜியம் பகுதியில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்தவர் சிவசங்கர் பாபா. இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்ததாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து முன்னாள் மாணவிகள் பலரும் ஆதாரத்துடன் புகார் அளித்தனர். இதையடுத்து சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    தப்பியோட்டம்

    தப்பியோட்டம்

    அவர் உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள டேராடூன் பகுதியிலுள்ள ஒரு மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாகச் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியானது. சிபிசிஐடி போலீசார் உத்தரகாண்ட் செல்வதற்குள், அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து உஷாரான போலீசார் அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் அளித்திருந்தனர்.

    கைது

    கைது

    இந்தச் சூழ்நிலையில், டெல்லி- உத்தரப்பிரதேசம் எல்லை அருகே உள்ள காசியாபாத்தில் சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்தனர். மொட்டை அடித்திருந்த அவர், மஞ்சள் சட்டையும் காவி வேட்டியும் அணிந்து சுற்றி திரிந்துள்ளார். இதையடுத்து அவரை சென்னைக்கு அழைத்து வரத் தேவையான நடவடிக்கைகளை சிபிசிஐடி போலீசார் எடுத்தனர்.

    சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்

    சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்

    இந்நிலையில், நள்ளிரவில் சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து நேரடியாக அவர் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணைக்குப் பின்னர், வியாழக்கிழமை காலை அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+