சமூக செயற்பாட்டாளர் முகிலனை காணவில்லை.. சுயவிவரங்களுடன் சுவரொட்டி வெளியிட்ட சிபிசிஐடி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சமூக செயற்பாட்டாளர் முகிலனை காணவில்லை, சுவரொட்டி வெளியிட்ட சிபிசிஐடி

    சென்னை: சமூக செயற்பாட்டாளர் முகிலனை காணவில்லை என அவரது சுயவிவரங்களுடன் கூடிய சுவரொட்டியை சிபிசிஐடி போலீஸ் வெளியிட்டுள்ளது.

    தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த இவர், கடந்த 15-ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பு தகவலை அளித்தார்.

    அதில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வன்முறையில் பொதுமக்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயரதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்பது தொடர்பான ஆதாரங்களை முகிலன் வெளியிட்டார்.

    ரயில் நிலையம்

    ரயில் நிலையம்

    பின்னர் பேசிய அவர் இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த சந்திப்பு முடிவுற்ற பிறகு எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கு ரயிலில் சென்றுள்ளார்.

    முகிலன் நண்பர்கள்

    முகிலன் நண்பர்கள்

    இரவு 10.30 மணிக்கு நண்பர்களுடன் போனில் பேசிய அவரிடம் இருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை. பாதி வழியில் மாயமானதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

     கடத்தப்பட்டாரா முகிலன்

    கடத்தப்பட்டாரா முகிலன்

    அரசுக்கு எதிராக ஆதாரங்களை வெளியிடுவேன் என கூறியதால் முகிலன் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. மேலும் முகிலனை தேடி கண்டுபிடிக்க உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சமயத்தில் இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

    புது தகவலை வெளியிட்ட சிபிசிஐடி

    புது தகவலை வெளியிட்ட சிபிசிஐடி

    முகிலன் காணாமல் போன விவகாரத்தில் புதிய தகவல் வெளியானது. முகிலன் 10.30 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தை விட்டு வெளியே சென்று மீண்டும் பதினொன்றரை மணி அளவில் எழும்பூர் ரயில் நிலையத்திற்குள் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருப்பதாக சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சுவரொட்டி

    சுவரொட்டி

    இந்த நிலையில் முகிலனுடைய புகைப்படம், சுய விவரங்களுடன் கூடிய சுவரொட்டியை சிபிசிஐடி வெளியிட்டுள்ளது. அதில் முகிலனை காணவில்லை என்றும் அவர் குறித்து தகவல் அளிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கும். 044- 28513500, 99629 08908 என்ற எண்களுக்கு தகவல் கொடுக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+