ரயில் நிலையங்களில் சிசிடிவி பொருத்த நிதி ஒதுக்கீடு.. குழுவும் அமைப்பு.. சைலேந்திர பாபு தகவல்
சென்னை: தமிழகத்திலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா விரைவில் பொருத்தப்படும் என, ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில், தேன்மொழி என்ற இளம்பெண் தனது காதலன் சுரேந்தர் என்பவனால் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்தார். அரிவாளால் வெட்டப்பட்டதில் தாடை, கை விரல்களில் காயமடைந்த தேன்மொழி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இந்த கொடூர சம்பவத்தால் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து அலறி ஓடினர்.

தேன்மொழியை வெட்டிய சுரேந்தர் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சுரேந்தரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னையில் கடந்த சில வருடங்களுக்கு முன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற, சுவாதி படுகொலை சம்பவத்தை போலவே இந்த சம்பவமும் மக்கள் நடமாட்டம் மிகுந்த, பிரதான ரயில் நிலையத்தில் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தால் ரயில் பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதனிடையே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேன்மொழியை ரயில்வே காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் சென்று பார்த்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திர பாபு, தேன்மொழியின் உயிருக்கு ஆபத்தில்லை. அவர் வெட்டப்பட்டது குறித்து புலன் விசாரணை நடைபெற்று வருகிறது என கூறினார்.
சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கென ஒரு குழுவும் அமைக்கப்பட்டு கேமராக்களை பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் அனைத்து ரயில் நிலையங்களிலுமே சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டுள்ளது. தேன்மொழி வெட்டப்பட்ட சேத்துப்பட்டு ரயில் நிலையத்திலும் ஒரு சில இடங்களில் சிசிடிவிகேமரா பொருத்தப்ப்டுள்ளது. எஞ்சியுள்ள இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த, நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தகவல் தெரிவித்த சைலேந்திர பாபு, தேன்மொழி - சுரேந்தர் இருவருக்குமிடையே தகராறு முற்றிய போது, அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார்.
எனினும் சிறிது நேரத்திலயே மீண்டும் தகராறு முற்றியதால் இந்த அரிவாள் வெட்டு சம்பவம் நடந்துள்ளதாக குறிப்பிட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications