கஜா புயலால் தமிழகத்தில் கடும் சேதம்.. ஆயிரக்கணக்கான வீடுகள் நாசம்- மத்திய குழு
சென்னை : கஜா புயலால் தமிழகத்தில் கடும் சேதம்ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் நாசமானது என மத்திய குழு தெரிவித்துள்ளது.
கஜா புயலால் நாகை, திருவாரூர், வேதாரண்யம், புதுக்கோட்டை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழக அரசு புணரமைப்பு பணிக்காக முதல் கட்டமாக ரூ. 1000 கோடியை ஒதுக்கீடு செய்தது.

இந்நிலையில் கஜா புயல் பாதித்த இடங்களில் புணரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ரூ.15000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து டேனியல் ரிச்சர்டு தலைமையில் 7 அதிகாரிகள் கொண்ட குழுவினர் சென்னை வந்தனர். அப்போது முதல்வர், தலைமை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோரிடம் ஆலோசனை நடத்திவிட்டு பின்னர் புயல் பாதித்த இடங்களில் ஆய்வு செய்தனர்.
3 நாட்கள் நடைபெற்ற இந்த ஆய்வு இன்று முடிந்துவிட்டது. இதையடுத்து மத்திய குழுவினர் டெல்லி செல்லும் முன்பு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வருடன் ஆலோசனை நடத்தினர். அப்போது அவர்கள் தங்கள் ஆய்வு குறித்து தெரிவித்திருக்கலாம் என தெரிகிறது.
மேலும் நிதியுதவி குறித்து தமிழக முதல்வரும் கோரிக்கை விடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி செல்லும் மத்திய குழுவினர் தங்கள் ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிப்பர் என தெரிகிறது.
இதுகுறித்து மத்திய குழு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் புயல் பாதித்த திண்டுக்கல் மாவட்டத்துக்கு செல்ல முடியவில்லை. புயலால் ஏராளமான சேதம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான வீடுகள் புயலால் சேதமடைந்துள்ளன. மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விட்டன. பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் புயல் சேதத்தை பார்வையிட்டனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications