ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை.. ஆயுஷ்மான் ரேஷன் அட்டைதாரர்களுக்கான குட்நியூஸ்
சென்னை: ஆயுஷ்மான் ரேஷன் கார்டுதாரர்கள் அக்டோபர் 2ஆம் தேதிக்குள் 5லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சையை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அரசு இலவசமாக வழங்கும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டம் வாயிலாக மக்கள் ரூ.5 லட்சம் வரை பயன்பெற முடியும். இந்த திட்டத்தை அரசு தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

இந்தியாவில் ஆயுஷ்மான் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் சார்பில் ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மத்திய அரசு ஆயுஷ்மான் அட்டைதாரர்களுக்கான முக்கிய பரிசு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, தற்போது வரையிலும் பொதுமக்கள் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்களை மட்டுமே பெற்று வந்தனர்.
இந்நிலையில் தற்போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு 5லட்சம் வரையிலான இலவச சிகிச்சையினை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசின் இந்த புதிய திட்டம் செப்டம்பர் 17ம் தேதி துவங்கப்பட்டுள்ள நிலையில் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி வரைக்கும் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரையிலும் இந்த திட்டத்தின் கீழ் 80 கோடி மக்கள் பயனடைந்துள்ள நிலையில் அக்டோபர் 2ஆம் தேதிக்குள் இலவச சிகிச்சையை பெற்றுக் கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுஷ்மான் இலவச மருத்துவ சிகிச்சை திட்டத்தின் கீழ் அனைத்து சுகாதார வசதிகளும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 23, 2018 அன்று பி.எம். ஜான் அரோகியா யோஜனா மருத்துவக் காப்பீடு திட்டத்தை வெளியிட்டார். ஆகஸ்ட் 1, 2023 நிலவரப்படி, மொத்தம் 24.33 கோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய குடும்பத்தினருக்கு வருடத்திற்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீட்டை இந்த திட்டம் உறுதி செய்கிறது. மருத்துவ தேவைகளுக்கு பணமில்லா அணுகலை இந்த திட்டம் வழங்குகிறது. அரசு மற்றும் அரசு சாராத அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இந்த திட்டத்தின் வாயிலாகப் பயன்பெறலாம்.
முதல் 3 நாள்களைத் தொடர்ந்து, சிகிச்சை பெறும் அடுத்த 15 நாள்களும் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் தேவைப்படும் மருத்துவ செலவை ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம் செலுத்தும். குடும்பத்தின் அளவு, வயது, பாலினம் ஆகியவற்றிற்கு எந்த வரம்பும் இல்லை.
முன்னே கண்டறியப்பட்ட நோய்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
அரசு பட்டியலிட்டுள்ள மருத்துவமனைகளில் மட்டுமே இந்த இலவச சேவைகள் கிடைக்கும். மருந்துகள், பொருள்கள், கண்டறியும் சேவைகள், மருத்துவரின் கட்டணம், அறை கட்டணங்கள், அறுவை சிகிச்சை கட்டணங்கள், OT, ICU கட்டணங்கள் போன்ற சுமார் 1,929 சேவைகளில் சிகிச்சை தொடர்பான அனைத்து செலவுகளையும் இந்த காப்பீடு திட்டம் பார்த்துக்கொள்ளும்.
அனைத்து பொது மருத்துவமனைகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகளில் இந்த திட்டம் நடப்பில் உள்ளது. தகவல்களுக்கு 14555 என்ற இலவச எண்ணை அழைத்து பயனடையலாம். இந்த திட்டத்தை குறித்து கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள https://abdm.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.
பயனாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதோடு தொடர்புடைய செலவுகளுக்கு எந்த கட்டணத்தையும், பிரீமியம் தொகையையும் செலுத்த வேண்டியதில்லை. கூடுதலாக, மருத்துவமனைக்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள் திட்டத்தின் கீழ் வரும் என்பதால், செலவுக்கு அஞ்சாமல் தைரியமாக சிகிச்சைப் பெறலாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications