தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வரப்பிரசாதம்.. 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி
சென்னை: தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் கூடுதல் தரமான மருத்துவ சேவைகள் தமிழகத்திற்கு கிடைப்பதுடன், தமிழகத்திறக்கு 900 எம்பிபிஸ் சீட்டுகள் கூடுதலாக கிடைக்கும்.
இந்தியாவின் பின்தங்கிய பகுதிகளில் 75 மருத்துவக் கல்லூரிகளை அமைக்கப் போவதாக கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்திருந்தது.

6 மருத்துவக் கல்லூரி
அதில் 6 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்தில் அமைப்பதாக அறிவித்துள்து. அவை முறையே இராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

எம்பிபிஎஸ் இடங்கள்
தமிழ்நாட்டில் புதிய அமைக்கப்படவுள்ள மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் உருவாக்கப்படவுள்ளன. தமிழகத்தில் இப்போது இரு வகைகளில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,600 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து அமைக்கும் 6 கல்லூரிகளில் 900 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.

அரசுகள் பங்களிப்பு
ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியும் ரூபாய் 325 கோடி மதிப்பில் உருவாக்கப்படுகிறது. மத்திய அரசு 195 கோடியும் மாநில அரசு 40 % சதவீதமும் (130 கோடி) பங்களிக்க முடிவு செய்துளளது.

ராமதாஸ் தகவல்
இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசுடன் இணைந்து அமைக்க உள்ள 6 மருத்துவக்கல்லூரிகள் இல்லாமல், தமிழ்நாட்டில் திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறியிருந்தார். புதிய கல்லூரிகளுக்கான இடம் தேர்வு, மதிப்பீடு தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறியிருந்தார்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications