நீட் விலக்கு மசோதா குறித்து புதிய தகவல்.. மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு
சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து புதிய தகவல் வெளியாகி உளளது. இதன்படி நீட் விலக்கு மசோதாவை 2 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டதாக உயர்நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு எம்பிபிஎஸ் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர வேண்டும் எனில் நீட் தேர்வை எழுத வேண்டும் என மத்திய அரசு கட்டாயமாக்கியது. ஆனால் இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என ஒருமனதாக தமிழக சட்டசபையில் பிப்வரி 20ம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்பதலுக்காக கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி மத்திய அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நீட் தொடர்பாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்பட 4 பேர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று இந்த வழக்கில் மத்திய உள்துறை துணை செயலாளர் ராஜீவ் எஸ் வைத்யா சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதா 2017ம் ஆண்டு பிப்ரவரி 20ம்தேதி கிடைக்கப் பெற்றதாகவும், அதன்பிறகு அந்த மசோதா சட்டம் மற்றும் நீதித்துறை அனுப்பிவைக்கப்பட்டதாகவும். இதையடுத்து 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி அனுப்பிவைக்கப்பட்ட தமிழக அரசின் மசோதாவை குடியரசுத்தலைவர் நிறுத்தி வைத்தார் என்றும், அதே ஆண்டு செப்டம்பர் 222ம்தேதியே மத்திய அரசு மசோதாவை திருப்பி அனுப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications