செம்பரம்பாக்கத்தில் இன்று ஒரே நாளில் 20 செ.மீ மழை பெய்யும்- மத்திய நீர் வளத் துறை வார்னிங்
சென்னை: சென்னை செம்பரம்பாக்கத்தில் இன்று ஒரே நாளில் 20 செ.மீ. மழை பெய்யும் என மத்திய நீர் வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மத்திய நீர் வளத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் செம்பரம்பாக்கம் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 150 முதல் 200 மி.மீ. மழை பெய்யும்.
அதாவது 15 செமி. முதல் 20 செ.மீ வரை பெய்யும். இதனால் சராசரியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 7062 கனஅடி நீர் அதிகரிக்கும்.

ஏரி வாய்க்கால்
இதனால் செம்பரம்பாக்கம் ஏரி வாய்க்கால் செல்லும் கிராமத்தினர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள். அது போல் செம்பரம்பாக்கம் ஏரிநீர் பகுதியில் உள்ள அடையாற்றிலும் தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே அடையாற்றிலும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு.

அதிகாரிகள்
எனவே ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், சென்னை பகுதிகளில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்க வேண்டும். அது போல் சென்னை விமான நிலையத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு குறித்து அதிகாரிகள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் வரத்து
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 12 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுவதால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் நிவாரண பகுதிகளுக்கு செல்ல வேண்டும். செம்பரம்பாக்கத்திற்கு தற்போது நீர் வரத்து வினாடிக்கு 4000 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
|
அபாய எச்சரிக்கை
செம்பரம்பாக்கம் நீரின் மட்டம் தற்போது 21.67 அடியாக உள்ளது. ஏரிக்கு வரும் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் இந்த ஏரி முழு கொள்ளளவான 24 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது செம்பரம்பாக்கத்தில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications