நிறுவனங்களுக்கு சூப்பர் சலுகைகள்.. அதேபோல விவசாயிகளின் அத்தனை கடன்களையும் தள்ளுபடி செய்யலாமே?
சென்னை: கொரோனா லாக்டவுனை முன்வைத்து தொழில்துறையினருக்கு ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. இதேபோல் வாழ்வாதாரங்களை இழந்திருக்கும் விவசாயிகள் வாழ்விலும் ஒளியேற்ற கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்பை மத்திய அரசு வெளியிடுமா? என்பது எதிர்பார்ப்பு.
கொரோனா பரவுவதைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் ஒவ்வொரு துறையிலும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி முடங்கிப் போயுள்ளது.
தேசமே 50 நாட்கள் முடங்கி இருப்பதால் ஒவ்வொரு துறையும் அடுத்த அடியை நகருவதற்கு பெரும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த துயரங்களைத் தீர்க்க வேண்டிய மிகப் பெரும் கடமையுடன் மத்திய அரசும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உத்வேகத்துடன் தொழில் நிறுவனங்கள்
அதுவும் பிரதமர் மோடி அறிவித்த ரூ20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார திட்டங்கள் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஒவ்வொரு துறையிலும் ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் அறிவிப்பை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார். அப்போது ரூ20 லட்சம் கோடி திட்டத்தின் முக்கிய அம்சங்களை விவரித்தார். இது தொழில் நிறுவனங்களுக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்திருக்கிறது.

வங்கி கடன் உதவிகள்
இதேபோல் வருமான வரி செலுத்துவோர்; வங்கித் துறையினர், நிதி நிறுவனங்களை நடத்துவோர் என ஒவ்வொரு பிரிவினருக்குமான சலுகைகள், கடன் உதவிகள் அறிவிக்கப்பட்டன. சிறு, குறு தொழில்கள் தொடர்பான வரம்புகள் மாற்றி அமைக்கப்பட்டன. இந்த நிறுவனங்களின் வங்கி கடன்களுக்கு அரசே உத்திரவாதத்தையும் வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
இருப்பினும் தனிநபர்களுக்கு எந்த ஒரு திட்டமும் இல்லையே என்கிற ஆதங்கம் வெளிப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றும் மத்திய அரசின் அடுத்த செயல் திட்டம் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்கிறார். இன்று வேளாண்துறையினருக்கான பல்வேறு சலுகைகளை நிர்மலா சீதாராமன் அறிவிக்கலாம் என கூறப்படுகிறது.

கடன்கள் தள்ளுபடி?
இச்சந்திப்பின் போது தாங்கள் வங்கிகளில் பெற்ற கடன்கள் உள்ளிட்டவைகளை மொத்தமாக தள்ளுபடி செய்தால் நன்றாக இருக்கும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு. லோக்சபா தேர்தலின் போது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இத்தகைய ஒரு வாக்குறுதியை மக்களிடத்தில் வைத்திருந்தன. அது மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசும் தற்போதைய நெருக்கடியான சூழலில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யுமா? என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications