வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Recommended Video

சென்னை: தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களான பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மாலை மற்றும் இரவு வேளைகளில் லேசான மற்றும் மிதமான மழை பெய்தது.

நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தின் காஞ்சிபுரம், ஓரிக்கை, செவிலிமேடு, பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்தது. இதேபோல் திருண்ணாமலை மாவட்டத்தில் ம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. போளூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் பரவலாக மழை பெய்தது.
இதனிடையே தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், வளிமண்டலத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை குறைந்துள்ளது. அங்கு இரண்டு நாள்களுக்கு பிறகு மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு வேளைகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" இவ்வாறு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications