சாந்தினியின் செல்போனிலும் மெயிலிலும் குவிந்துள்ள ஆதாரங்கள்?.. ஹேக் செய்ய முயற்சி என புகார்
சென்னை: துணை நடிகை சாந்தினியின் செல்போனை ஹேக் செய்ய முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததால் கடந்த 5 ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்ந்த நிலையில் தற்போது அவர் தன்னை மிரட்டி வருவதாக துணை நடிகையும் மலேசிய தூதரகத்தில் பணியாற்றுபவருமான சாந்தினி புகார் அளித்துள்ளார்.
தனக்கு 3 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் மணிகண்டன் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். மேலும் காப்பர் டி கருவியை கர்ப்பப்பையில் பொருத்த வைத்து தன்னுடன் குடும்பம் நடத்தியதாகவும் தெரிவித்தார்.

மணிகண்டன்
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீஸார் ராமநாதபுரத்திற்கு சென்றுள்ளார்கள். ஆனால் மணிகண்டனோ அவரது 2 செல்போன்களையும் ஆஃப் செய்து தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின்றன. அவர் சென்னையில் பதுங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சாந்தினி
இந்த நிலையில் பணம் பறிப்பதற்காக தன் மீது சாந்தினி இத்தகைய புகாரை கொடுத்துள்ளதாக மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு முன் ஜாமீன் தரக் கூடாது என ஆட்சேபனை மனுவை சாந்தினி தாக்கல் செய்துள்ளார்.

பொய்
தான் பணம் பறிக்க பாலியல் புகாரை அளித்ததாக மணிகண்டன் கூறுவது பொய். தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்ததால் கணவன், மனைவியாக வாழ சம்மதித்தேன் என கூறியுள்ளார். மேலும் தனது செல்போனும் ஈ மெயிலும் ஹேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன.
Recommended Video

போலி இ மெயில்
சிபிஐ என்ற பெயரில் போலி இ மெயில் அனுப்பி தனது மெயிலை ஹேக் செய்ய முயற்சிகள் நடத்தப்படுவதாகவும் சாந்தினி தெரிவித்தார். மேலும் இ மெயிலின் பாஸ்வேர்ட்டை கேட்டு தொல்லை செய்வதாகவும் தெரிவித்த அவர் என்னிடம் உள்ள ஆதாரங்களை அழிக்க முயற்சிக்கிறார்கள் என புகார் அளித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications