Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலவில் கால் பதித்த சந்திரயான் 3.. சோமயான்.. சந்திரயான் ஆக மாறிய கதை.. வாஜ்பாய் போட்ட விதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்திரனில் கால் பதித்து சரித்திர சாதனை படைத்துள்ளது பாரத தேசம். உலகத்தில் உள்ள அனைவரின் கண்களும் சந்திரனை நோக்கி இருந்தது. சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில் நிலவு குறித்த ஆராய்ச்சி பயணத்திற்கு சந்திரயான் என்று பெயர் வந்தது எப்படி என்று சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

சோமன் என்றால் சந்திரன் என்று அர்த்தம்.. மிஷன் சோமயான் என்று இஸ்ரோ பெயரிட்டதை சந்திரயான் 1 என்று பெயரை மாற்றி நிலவு ஆராய்ச்சிக்கான பெயரை மாற்றியவர் அப்போதய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்.

Chandrayaan-3: Somayan changed to Chandrayaan with Vajpayee’s suggestion

கடந்த 2003 ஆம் ஆண்டு நாட்டின் 56வது சுதந்திர தினத்தன்று செங்கோட்டையின் அரண்மனையிலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், இந்தியாவின் முதல் நிலவு ஆய்வுத் திட்டத்தை வெளியிட்டார்.

சந்திரயான் 1 . "நம் நாடு இப்போது அறிவியல் துறையில் உயரப் பறக்க தயாராக உள்ளது. 2008 ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது சொந்த விண்கலத்தை நிலவுக்கு அனுப்பும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்கு சந்திரயான் என்று பெயரிடப்பட்டுள்ளது என்று உற்சாகமாக அறிவித்தார்.

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.கஸ்தூரிரங்கன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை கூறியுள்ளார். கடந்த 1999 ஆம் ஆண்டில் இஸ்ரோவின் தலைவராக இருந்த கஸ்தூரிரங்கன், சந்திரன் ஆராய்ச்சிக்காக அனுமதி கோரி மத்திய அரசை அணுகினார். அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய், பணியின் பெயர் என்ன என்று கேட்டார். இந்த சோதனைக்கு 'சோமயான்' என்று பெயரிட விரும்புவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்த பெயர் சமஸ்கிருதத்தில் ஒரு வசனத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஸ்லோகத்திற்கு.. 'ஓ சந்திரனே.. எங்களின் புத்திசாலித்தனத்தால் உன்னை அடைய விரும்புகிறோம். எங்களுக்கு வழிகாட்டு என்று அர்த்தம். கஸ்தூரிரங்கன் வாஜ்பாயிடம் அதனால்தான் அந்தப் பெயரை வைத்தார்கள் என்று கூறினார்.

Chandrayaan-3: Somayan changed to Chandrayaan with Vajpayee’s suggestion

இதற்குப் பதிலளித்த வாஜ்பாய், சந்திரன் பயணத்திற்கு 'சந்திரயான் 1' என்று பெயரிட வேண்டும் என்று பரிந்துரைத்தார். "இப்போது நாடு பொருளாதார சக்தியாக மாறி வருகிறது. எதிர்காலத்தில் நிலவுக்கு அதிக பயணங்களை மேற்கொள்ளும் திறன் எங்களிடம் உள்ளது" என்று வாஜ்பாய் கூறியதை நினைவு கூர்ந்துள்ளார் கஸ்தூரி ரங்கன்

இதற்கிடையில், 2003 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வாஜ்பாய் இந்த பரிசோதனையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். "நமது நாடு இப்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் உயர் நிலைக்கு உயரத் தயாராக உள்ளது. 2008 ஆம் ஆண்டுக்குள் நமது விண்கலத்தை நிலவுக்கு அனுப்புவோம். அந்த பணியின் பெயர் சந்திரயான் என்று வாஜ்பாய் அறிவித்தார்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கூறியது போல, முதலில் சந்திரனுக்கு விண்கலத்தை ஏவுவதற்கான திட்டங்களைத் தயாரிக்க நான்கு ஆண்டுகள் ஆனது. சந்திரயான்-1 நிலவின் மேற்பரப்பில் நீரின் தடயங்களைக் கண்டறிந்ததால் இந்த பணி வெற்றிகரமாக முடிந்தது. அதன் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட சந்திரயான்-2 கடைசி நிமிடத்தில் தோல்வியடைந்தது. தோல்வியில் பாடம் கற்ற இஸ்ரோ வெற்றிகரமான பயணத்தை தொடங்கியது. கடந்த ஜூலை 14ஆம் தேதி இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் கால்பதித்துள்ளது. உலகமே இப்போது இந்தியாவின் சாதனையை பாராட்டி வருகிறது. இந்த சரித்திர சாதனைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே விதை போட்டவர் அப்போதய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+