பயமூட்டும் செம்பரம்பாக்கம்.. கிடுகிடுவென நிரம்பும் நீர்! 6000 கனஅடி திறக்க முடிவு -சென்னைக்கு அலர்ட்
சென்னை: கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழையை ஒட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ள மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரும் ஏரியான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

452 கன அடியாக இருந்த நிலையில் தற்போது அது 514 கன அடியாக அதிகரித்து இருக்கிறது.
3,645 மி.கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 90 சதவீதத்துக்கும் அதிகமாக கன அடி நீர் இருப்பு உள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் வேகமாக தண்ணீர் நிரம்பி வருகிறது. ஏரி வேகமாக நிரம்பி முழு கொள்ளளவை நெருங்கி வருவதால், பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஏரியில் நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக செவ்வாய்கிழமை 200 கன அடி நீர் திறக்கப்பட்டு நேற்று 1000 கன அடி, 1500 கன அடி என படிப்படியாக உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் பாதுகாப்பு கருதி நீர் திறப்பு அளவு 2,429 கன அடியாக இன்று அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 9 மணி முதல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6000 கன அடி நீர் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3000 கன அடியாக அதிகரித்து உள்ளது. செம்பரம்பாக்கத்தில் 6000 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் அதன் கரையோர பகுதிளான அடையாறு, திருமுடிவாக்கம், சிறுகளத்தூர், குன்றத்தூர், திருநீர்மலை உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அடையாற்றில் 40 ஆயிரம் கன அடி வரை நீர் வெளியேற்றப்பட்டாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் செம்பரம்பாக்கம் கரையோரம் மற்றும் அதன் நீர் வெளியேற்ற பாதையில் அமைந்து இருக்கும் பகுதி மக்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்று கூறப்படுகிறது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications