Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயமூட்டும் செம்பரம்பாக்கம்.. கிடுகிடுவென நிரம்பும் நீர்! 6000 கனஅடி திறக்க முடிவு -சென்னைக்கு அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழையை ஒட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ள மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரும் ஏரியான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

Chembarambakkam Lake water opening increased to 6000 cubic feet

452 கன அடியாக இருந்த நிலையில் தற்போது அது 514 கன அடியாக அதிகரித்து இருக்கிறது.

3,645 மி.கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 90 சதவீதத்துக்கும் அதிகமாக கன அடி நீர் இருப்பு உள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் வேகமாக தண்ணீர் நிரம்பி வருகிறது. ஏரி வேகமாக நிரம்பி முழு கொள்ளளவை நெருங்கி வருவதால், பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஏரியில் நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக செவ்வாய்கிழமை 200 கன அடி நீர் திறக்கப்பட்டு நேற்று 1000 கன அடி, 1500 கன அடி என படிப்படியாக உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் பாதுகாப்பு கருதி நீர் திறப்பு அளவு 2,429 கன அடியாக இன்று அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 9 மணி முதல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6000 கன அடி நீர் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3000 கன அடியாக அதிகரித்து உள்ளது. செம்பரம்பாக்கத்தில் 6000 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் அதன் கரையோர பகுதிளான அடையாறு, திருமுடிவாக்கம், சிறுகளத்தூர், குன்றத்தூர், திருநீர்மலை உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அடையாற்றில் 40 ஆயிரம் கன அடி வரை நீர் வெளியேற்றப்பட்டாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் செம்பரம்பாக்கம் கரையோரம் மற்றும் அதன் நீர் வெளியேற்ற பாதையில் அமைந்து இருக்கும் பகுதி மக்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+