2015ல் சென்னை வெள்ளத்தில் மிதந்ததே.. அதற்கு பிறகு முதல் முறை.. செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் அளவு 22 அடி எட்டியுள்ள நிலையில் இன்று மதியம் 12 மணி முதல் ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
Recommended Video
முன்னதாக, வழுதியம்படு மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேறுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு சென்னையில் கனமழை ஓட்டிய போது, திடீரென குறுகிய முன் அறிவிப்புடன் ஏரி திறக்கப்பட்டது. பலருக்கும் அறிவிப்பு வெளியானதே அப்போது தெரியாது.

இரவோடு திறப்பு
இரவோடு இரவாக நீர் திறக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உண்டு. அப்போது 30 ஆயிரம் கன அடி வரை செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நகருக்குள் வெள்ள நீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ராணுவம் வந்து உணவு பொட்டலங்கள் வழங்கும் அளவுக்கு நிலைமை மோசமாக போனது.

5 வருடங்கள் பிறகு
இந்த சம்பவம் நடைபெற்று 5 ஆண்டுகள் ஆன பிறகு இப்போதுதான் முதல் முறையாக செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்படுகிறது என்று கூறப்படுகிறது. அதேநேரம் இம்முறை உரிய முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆயிரம் கன அடி
ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுவதால் பெரிய அளவுக்கு பாதிப்பு இருக்காது, என்ற போதிலும் பொதுமக்கள் ஒரு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செம்பரம்பாக்கம்
24 அடி கொள்ளளவு கொண்டது செம்பரம்பாக்கம் ஏரி. 22 அடி நிரம்பியதும் அது திறக்கப்படுவது வழக்கம். சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் செம்பரம்பாக்கமும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்!












Click it and Unblock the Notifications