2015ல் சென்னை வெள்ளத்தில் மிதந்ததே.. அதற்கு பிறகு முதல் முறை.. செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் அளவு 22 அடி எட்டியுள்ள நிலையில் இன்று மதியம் 12 மணி முதல் ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
Recommended Video
முன்னதாக, வழுதியம்படு மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேறுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு சென்னையில் கனமழை ஓட்டிய போது, திடீரென குறுகிய முன் அறிவிப்புடன் ஏரி திறக்கப்பட்டது. பலருக்கும் அறிவிப்பு வெளியானதே அப்போது தெரியாது.

இரவோடு திறப்பு
இரவோடு இரவாக நீர் திறக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உண்டு. அப்போது 30 ஆயிரம் கன அடி வரை செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நகருக்குள் வெள்ள நீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ராணுவம் வந்து உணவு பொட்டலங்கள் வழங்கும் அளவுக்கு நிலைமை மோசமாக போனது.

5 வருடங்கள் பிறகு
இந்த சம்பவம் நடைபெற்று 5 ஆண்டுகள் ஆன பிறகு இப்போதுதான் முதல் முறையாக செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்படுகிறது என்று கூறப்படுகிறது. அதேநேரம் இம்முறை உரிய முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆயிரம் கன அடி
ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுவதால் பெரிய அளவுக்கு பாதிப்பு இருக்காது, என்ற போதிலும் பொதுமக்கள் ஒரு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செம்பரம்பாக்கம்
24 அடி கொள்ளளவு கொண்டது செம்பரம்பாக்கம் ஏரி. 22 அடி நிரம்பியதும் அது திறக்கப்படுவது வழக்கம். சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் செம்பரம்பாக்கமும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications