வாசன் ஐ கேர் குழும தலைவர் அருண் உயிரிழப்பை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த சென்னை போலீஸ்
சென்னை: வாசன் ஐ கேர் குழுமங்களின் தலைவர் அருண் உயிரிழந்ததை சந்தேக மரணம் என சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வாசன் ஐ கேர் குழும தலைவர் அருணுக்கு சென்னையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தேனாம்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அருண் மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அருண் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
பிரேதபரிசோதனை முடிந்த பின்னர் அருண் உடல் உறவினர்களிடம் நேற்று பிற்பகல் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் அருணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்களும் நண்பர்களும் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகார்களின் அடிப்படையில் அருண் உயிரிழப்பை சந்தேக மரணமாக சி.ஆர்.பி.சி. 174-ன் கீழ் சென்னை தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications