செங்கல்பட்டில் ஜாம் ஆன எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. திணறிய தென்மாவட்ட மக்கள்! காலை வாரிய ரயில்வே துறை
சென்னை: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் உள்ளிட்ட பயணிகள் ரயில்கள் நிறுத்தி வைக்கபட்டதால், தென் மாவட்ட மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளனர்.
ஒட்டிவாக்கம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக செல்லும் ரயில்கள் செங்கல்பட்டில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நிறுத்தி வைக்கபட்டிருக்கின்றன. விழுப்புரம் பாசஞ்சர், பாண்டிச்சேரி விரைவு ரயில், செங்கோட்டை விரைவு ரயில், சேது விரைவு ரயில் உள்ளிட்டவை நீண்ட நேரம் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

திங்கட்கிழமை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு பயணிக்க தொடங்கியுள்ளனர். இதனால் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டிருந்தன.
அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) இரவு 11.35 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத ரயில் மறுநாள் காலை 10.15 மணிக்கு மதுரை சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர் துறைமுகம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
அதேபோல, தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 17 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06013) மறுநாள் காலை 7.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக இந்த ரயில் (எண்:06014) அக்.20 ஆம் தேதி திங்கள்கிழமை இரவு 8.45 மணிக்குப் புறப்படும். மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்ட இருந்தாலும் அவை போதுமானதாக இல்லை என்பதே உண்மை. போதுமான ரயில்கள் இல்லாததால் எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியுள்ளது. ரயிலில் கழிவறைக்கு பக்கத்தில், பொருட்கள் வைக்கும் இடம் என கிடைக்கும் இடங்களில் அமர்ந்து மக்கள் பயணிக்க தொடங்கியுள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக பயணிகளிடையே லேசான சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த சிரமங்களுக்கு இடையே பயணிகள், பயணத்தை தொடர்ந்த நிலையில், ரயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது, பயணிகளுக்கும் மேலும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இதுபோன்ற பண்டிகை நாட்களில் சிக்னல் கோளாறு ஏற்படாதவாறு முன்கூட்டியே பழுது பார்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும், மீறி பழுது ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications