ஈரக் கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்டதால் வந்த வினை.. சென்னை பள்ளி மாணவிக்கு ஏற்பட்ட பரிதாபம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈர கையுடன் செல்போன் சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எர்ணாவூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முகுந்தன். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் இவர்களுக்கு அனிதா (14), எழில்மதி (7) என இரு மகள்கள் உள்ளனர். இவருடைய மூத்த மகள் அனிதா (14) எண்ணூர் கத்திவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

Chennai mobile phone

இந்நிலையில் நேற்று மாலை அனிதா வீட்டில் இருந்த போது ஈரக் கையுடன் செல்போனை சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி கீழே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அனிதாவை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து எண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அனிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஈரக் கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்டதால், மின்சாரம் தாக்கி மாணவி உயிரிழந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் சார்ஜ் போடும்போது கவனமாக இருக்க வேண்டும், சார்ஜ் போட்டுக்கொண்டே பேசக் கூடாது என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+