சென்னையில் ஷாக்.. வீட்டின் பூட்டை உடைத்து மாற்று திறனாளி பெண் பலாத்காரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை அடுத்த மாங்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து மாற்று திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் நடந்த ஆபரேசன் பிறகு நடக்க முடியாமலும், வாய் பேச முடியாமலும், காது கேட்காமலும் இருந்துள்ளார்.

Chennai: a disabled woman raped near Mankadu, lorry driver arrested

இந்த நிலையில் அவரது தாயார் நேற்று மகளை வீட்டில் வைத்து பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இன்று காலை அவரது மகள் அருகில் வசிக்கும் லாரி டிரைவரான முத்து(36), என்பவர் வீட்டிற்குள் நுழைந்து தன்னை பாலியால் பலாத்காரம் செய்ததாக சைகை மூலம் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் இதுகுறித்து பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் முத்துவை பிடித்து விசாரணை செய்தபோது மாற்றுத்திறனாளி பெண்ணை வீட்டுக்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வீட்டில் ஆட்கள் இல்லாத போது வீட்டின் பூட்டை உடைத்து புகுந்து மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+