சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் தவிப்பு.. எல்பிஜி கேஸ் தட்டுப்பாட்டால் மணிக்கணக்கில் காத்திருப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்​னை​யில் ஆட்டோ எல்​பிஜி எரி​வாயு கிடைப்​ப​தில் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்ள​தால், ஆட்டோ ஓட்​டுநர்​கள் 3 மணி நேரம் வரை வரிசை​யில் காத்​திருந்​து, நிரப்பி செல்​லும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.

மத்​திய கிழக்​கில் நில​வும் போர் பதற்​றத்​தால், கேஸ் சிலிண்​டர், ஆட்டோ எல்​பிஜி எரி​வாயு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. இதை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்​திய அரசு எடுத்து வரு​கிறது. இதற்​கிடை​யில், வாக​னங்க​ளுக்​கான எல்​பிஜி, சிஎன்ஜி எரி​வாயு கிடைக்காத​தால், ஓட்​டுநர்​கள் கடும் சிரமத்தை சந்​தித்து வரு​கின்​றனர்.

lpg shortage auto

சென்னை நகரில் பல்​லா​யிரக்​கணக்​கான ஆட்​டோக்​கள், கால் டாக்​சிகள் எல்​பிஜி மற்​றும் சிஎன்ஜி எரி​வா​யுவை பயன்​படுத்​துகின்​றன. தற்​போது எல்​பிஜி எரி​வாயு தட்​டுப்​பாட்​டால், பல்​வேறு தனி​யார் ஆட்டோ எரி​வாயு நிலை​யங்​கள் மூடப்​பட்​டுள்​ளன.

சைதாப்​பேட்​டை, கிண்​டி. சிஐடி நகர் உள்பட சில இடங்​களில் திறக்​கப்​பட்​டுள்ள எல்பிஜி எரி​வாயு நிரப்​பும் நிலை​யங்​களில் நீண்ட வரிசை​யில் பல மணி நேரம் காத்​திருந்து நிரப்பி செல்​லும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. சிஐடி நகரில் 2 கி.மீ. தூரத்​துக்கு 3 மணி நேர​மாக நீண்ட வரிசை​யில் காத்​திருந்​து, எல்பிஜி நிரப்பி செல்​லும் நிலைக்கு ஆட்டோ ஓட்​டுநர்​கள் தள்ளப்​பட்​டுள்​ளனர்.

சென்​னை​யில் ஆட்​டோ, கார் ஆகிய​வற்​றுக்கு நிரப்​பப்​படும் கேஸ் நிரப்​பும் நிலை​யங்​கள் மூடப்​பட்​டுள்​ள​தால், ஆட்டோ ஓட்​டுநர்​கள் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. இது குறித்​து, ஆட்டோ ஓட்​டுநர்​கள் கூறுகை​யில், "ஏற்​க​னவே ஆட்டோ எரி​வாயு தட்​டுப்​பாட்டால், ஓட்​டுநர்​களின் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. தற்​போது, பெரும்​பாலான நிலை​யங்​களில் எல்​பிஜி எரி​வாயு கிடைக்​காத​தால், ஓட்​டுநர்​களுக்கு மன உளைச்​சல் ஏற்​பட்​டு, உடல்​நலக் குறைவு ஏற்​படு​கிறது. இந்தப் ​பிரச்​சனைக்கு மத்​திய அரசு தீர்வு காண வேண்​டும்" எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், "குறிப்பாக காலை நேரங்களில் தான் அதிக சவாரி கிடைக்கும். ஆனால் அந்த சமயத்தில் தான் அதாவது காலையில் தான் பங்க்குகளில் கேஸ் கிடைக்கிறது. மதியத்திற்கு மேல் கிடைப்பதில்லை. இதனால் சவாரியை விட்டுவிட்டு காலையில் எல்பிஜி நிரப்ப செல்ல வேண்டி உள்ளது. இதனால் எங்களுக்கு கிடைக்க கூடிய வருமானம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது" எனக் கூறுகின்றனர்.

மேலும் தேர்தலுக்கு முன்பு கூட கேஸ் கிடைத்தது என்றும் தேர்தல் முடிந்ததுமே கேஸ் கிடைக்கவில்லை என்றும் புலம்புகின்றனர். இஸ்ரேல் - ஈரான் போருக்கு முன்னால் 50 ரூபாய்க்கு கிடைத்த கேஸ் தற்பொழுது விலை அதிகரித்து 90, 100 என ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு வகையில் விற்கப்படுகிறது எனக் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்​து, இந்​திய எண்​ணெய் நிறுவன அதி​காரி​கள் கூறுகையில், "இந்​திய எண்​ணெய் நிறு​வனங்​களில் போது​மான அளவு எரி​வாயு கையிருப்பு உள்​ளது. எண்​ணெய் நிறு​வனங்களின் கீழ் செயல்​படும் எரி​வாயு நிரப்​பும் மையங்​களுக்​கும் போது​மான அளவு கேஸ் வழங்​கப்​படு​கிறது. வாகன ஓட்​டிகள் தங்​களுக்​குரிய வாக​னங்​களில் போது​மான அளவு கேஸ் நிரப்பி கொள்​ளலாம்.

ஆட்​டோக்​கள் நீண்ட வரிசை​யில் காத்​துக்​ கிடப்​ப​தற்கு காரணம் பல தனி​யார் கேஸ் நிரப்​பும் நிலை​யங்​களில், எரி​வாயு இல்​லாமல் இருப்​பதுதான். அத்​துடன், கேஸ் தட்​டுப்​பாடு காரண​மாக, ஒருசில கேஸ் நிரப்​பும் மையங்​கள் தற்​காலிக​மாக மூடப்​பட்​டுள்​ளன. இதனால், ஒட்​டுமொத்​த​மாக அனை​வரும் இந்​திய எண்​ணெய் நிறு​வனங்​கள் நடத்​தும் மையங்​களை தேடி ஒரே நேரத்​தில் செல்​வ​தால், நீண்ட வரிசை​யில் நிற்க வேண்​டிய நிலை ஏற்​படு​கிறது." எனத் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+