சென்னை ஆட்டோக்களுக்கு திடீரென போன முக்கிய உத்தரவு.. மக்களுக்கு குட் நியூஸ்.. இதை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பல பகுதிகளில் இருந்து மக்கள் வருவதால்.. மக்களின் வசதியை பூர்த்தி செய்யும் விதமாக சென்னை ஆட்டோக்கள் பர்மிட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளன.

நேற்று , 30.01.2024 முதல் தென் மாவட்டங்களுக்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் இருந்து 710 பேருந்துகள் மற்றும் மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து 160 பேருந்துகள் இயக்கப்பபட்டு வருகிறது.

Chennai auto permits has been extended amid the Kilaampakkam Bus Stand operation

கடந்த 30.12.2023 அன்று கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறந்து வைக்கப்பட்டது. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை பொது மக்களின் வசதிக்கேற்ப, நேற்று (30.01.2024) முதல் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் இருந்து 710 (80%) அரசுப் பேருந்துகள் மற்றும் மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து 160 (20%) அரசுப் பேருந்துகள் என ஆக மொத்தம் 870 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மற்றும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் நேற்று (30.01.2024) மாதவரம் பேருந்து முனையத்தில், தென் மாவட்டங்களுக்கான பேருந்து இயக்கத்தினை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள். மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் திருச்சி-18, சேலம்-17. விருத்தாசலம்-6, கள்ளக்குறிச்சி-16, விழுப்புரம்-16. கும்பகோணம்-14, சிதம்பரம்-5. நெய்வேலி-11. கடலூர் (வழி) புதுச்சேரி, திண்டிவனம்-5, புதுச்சேரி (வழி) திண்டிவனம்-10. திருவண்ணாமலை (வழி) செஞ்சி-22, போளூர் & வந்தவாசி-20 உள்ளிட்ட வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

ஆய்வு: மேலும், நேற்று (30.01.2024) போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தினை ஆய்வு மேற்கொண்டு, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் விவரங்களை கேட்டறிந்தார்கள். இவ்வாய்வின் போது, விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ராஜ்மோகன், முதன்மை நிர்வாக அலுவலர் ஜெ.பார்த்தீபன் மற்றும் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

நேற்று முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து செங்கல்பட்டு. திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் திருச்சி-118. சேலம்-66. விருத்தாசலம்-30. கள்ளக்குறிச்சி-50, விழுப்புரம்-59. கும்பகோணம்-52, சிதம்பரம்-21. நெய்வேலி -46, கடலூர் (வழி) புதுச்சேரி, திண்டிவனம்-32, புதுச்சேரி (வழி) திண்டிவனம்-35, திருவண்ணாமலை (வழி) செஞ்சி-125, போளூர்-30, வந்தவாசி-46 உள்ளிட்ட வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அறிவுறுத்தல்: பொது மக்களின் வசதிக்கேற்ப, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் வரும் பேருந்துகள் மட்டும் தாம்பரம் வரை இயக்கப்பட்டு, பயணியரை இறக்கிவிட்டதும். கிளாம்பாக்கத்திற்கு திரும்பி, அங்கிருந்து பயணியரை ஏற்றிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கிளாம்பாக்கம் மா.போ.கழக பேருந்து நிலையத்திலிருந்து, கிளாம்பாக்கம் வெளியூர் பேருந்து நிலையம் வந்து, செல்லும் பயணிகளை, மா.போ.கழக சிற்றூந்துகளில் கட்டணமில்லாமல் ஏற்றி, இறக்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆட்டோ வசதி: இந்த நிலையில் கூடுதலாக .. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பல பகுதிகளில் இருந்து மக்கள் வருவதால்.. மக்களின் வசதியை பூர்த்தி செய்யும் விதமாக சென்னை ஆட்டோக்கள் பர்மிட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி சென்னை ஆட்டோக்களின் பர்மிட்களை சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் (CMDA) எல்லை வரை நீட்டித்தது போக்குவரத்து துறை. இதன்மூலம், சென்னை பர்மிட் ஆட்டோக்களை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், ராணிப்பேட்டை வரை இயக்கலாம். எல்லை தாண்டியதாக இனி அபராதம் விதிக்கப்படாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+