‛‛இன்று + ஜுன் 4’’.. சென்னை மின்சார ரயில் சேவையில் முக்கிய மாற்றம்.. நோட் பண்ணுங்க மக்களே
சென்னை: சென்னை பீச் - செங்கல்பட்டு இடையே தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் இன்று மற்றும் ஜுன் 4 ஆகிய நாட்களில் சென்னை பீச் - செங்கல்பட்டு இடையே இயங்கும் 8 ரயில்கள் சிங்கபெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயனடைந்து வருகின்றனர். குறைந்த கட்டணத்தில் விரைவாக பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றன.

இந்நிலையில் தான் சென்னை எழும்பூர் - விழுப்புரம் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று மற்றும் ஜுன் 4 ஆகிய 2 நாட்கள் சென்னை பீச்- செங்கல்பட்டு இடையே இயங்கும் 8 ரயில்கள் சிங்கபெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை எழும்பூர் - விழுப்புரம் பிரிவு (செங்கல்பட்டு யார்டு) இடையே இன்று (மே 31) மற்றும் ஜுன் 4ம் தேதிகளில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 4 மணிநேரம் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக இன்று மற்றும் ஜுன் 4 ஆகிய நாட்களில் 8 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட உள்ளன.
அதன்படி காலை 9.30 மணிக்கு புறப்படும் சென்னை பீச் - செங்கல்பட்டு மின்சார ரயில் (வண்டி எண் 40523), காலை 10.56 மணிக்கு புறப்படும் சென்னை பீச் - செங்கல்பட்டு மின்சார ரயில் (40527), காலை 11.40 மணிக்கு புறப்படும் சென்னை பீச் - செங்கல்பட்டு மின்சார ரயில் (வண்டி எண் 40529), மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சென்னை பீச் - செங்கல்பட்டு மின்சார ரயில் (40533) ஆகிய ரயில்கள் இன்று மற்றும் ஜுன் 4 ஆகிய தேதிகளில் சிங்கபெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே இயங்காது.
அதேபோல் காலை 11.30 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு - சென்னை பீச் மின்சார ரயில் (40532), மதியம் 1 மணிக்கு பறப்படும் செங்கல்பட்டு - சென்னை பீச் மின்சார ரயில் (40536), மதியம் 1.45 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு - சென்னை பீச் மின்சார ரயில் (40538), மதியம் 3.15 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு - சென்னை பீச் மின்சார ரயில் (40542) ஆகியவை செங்கல்பட்டு - சிங்கம்பெருமாள் கோவில் இடையே இன்று மற்றும் ஜுன் 4 ஆகிய தேதிகளில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த ரயில்களை பயன்படுத்துவோர் இந்த 2 நாட்களிலும் குறிப்பிட்ட இந்த நேரங்களில் தங்களது பயணத்துக்கான மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்வது சிறந்ததாகும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications