பியூட்டி பார்லருக்குள் விநோத சத்தம்.. மொட்டை மாடிக்கு போய் பார்த்தால்.. ஆடிப்போன சென்னை அமைந்தகரை
சென்னை: சென்னை அமைந்தகரை பியூட்டி பார்லரை திறக்க வந்த ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.. இதையடுத்து, போலீசாருக்கு உடனடி தகவல் தரப்பட்டதையடுத்து, விசாரணையும், கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்ன நடந்தது?
சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் பிரபலமான "கிரீன் டிரெண்ட்ஸ்" என்ற பிரபல தனியார் பியூட்டி பார்லர் இயங்கி வருகிறது. இங்கு, சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் ஊழியர்கள் பணிமுடிந்து, பியூட்டி பார்லரையும் பூட்டிவிட்டு சென்றுவிட்டார்கள்.

மொட்டை மாடி: பிறகு நேற்று காலை ஊழியர்கள் பார்லரை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன.. கடைக்குள் சென்று பார்த்தபோது, பொருட்கள் மற்றும் லேப்டாப் உடைப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து பியூட்டி பார்லர் மேனேஜர், உடனடியாக அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சோதனை செய்தார்கள். அப்போது மாடியிலிருந்து வினோத சத்தம் வந்துள்ளது.. பிறகுதான் அது குறட்டை சத்தம் போல இருப்பதாக நினைத்து, போலீசார் மாடிக்கு ஓடிச்சென்று பார்த்துள்ளனர்.
குறட்டை சத்தம்: அப்போது மது போதையில் ஒருவர், மது பாட்டில்களுடன் 'ஹாயாக' குறட்டை விட்டு துாங்கிக் கொண்டிருந்தார். இதனால், போலீசார் அவரை தட்டி எழுப்பி உட்கார வைத்து விசாரித்தனர்..
அப்போதுதான் அந்நபர் ஆந்திராவைச் சேர்ந்த கிஷோர் (24) என்பது தெரியவந்தது. இந்த பியூட்டி பார்லரில் நள்ளிரவில் பூட்டை உடைத்து திருட வந்தாராம்.. ஆனால் பணம், பொருட்கள் எதுவும் கிடைக்காமல் அப்செட் ஆகிவிட்டாராம்.
மொட்டை மாடி: மதுபோதை அதிகமாக இருந்ததால், மாடியில் சரக்கடித்துவிட்டு கிளம்பி போகலாம் என்று நினைத்தாராம்.. ஆனால் தன்னை மறந்து தூங்கிவிட்டதாக கூறினார்.. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், வேறு ஏதாவது கடைகளில் திருடியுள்ளாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். திருட வந்த இடத்தில் மதுபோதையில் குறட்டை விட்டுத் தூங்கிய இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் நுங்கம்பாக்கத்தில் பரபரப்பை தந்து வருகிறது.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications