சென்னை கார் விபத்தில் சிக்கி கானா பாடகி திருநங்கை உள்பட 4 பேர் காயம்
சென்னை: சென்னையில் கார் விபத்தில் சிக்கி கானா பாடகி திருநங்கை விமலா உள்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். கச்சேரி முடித்துவிட்டு திரும்பிய போது அதிவேகத்தில் வந்ததால் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேரும் காயமடைந்தனர்.
சென்னை புதுப்பேட்டை மேற்கு கூவம் பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை விமலா. இவர் ஒரு கானா பாடகி. இவரது நண்பர்கள் அருண்குமார், பிரசாந்த் மற்றும் வசந்த் ஆகியோருடன் இவர் இன்று அதிகாலை சென்னை மெரினா சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது காரை அதிவேகமாக இயக்கியதால் அங்கிருந்த தடுப்புச்சுவரின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து காயமடைந்த 4 பேரும் ஆம்புலன்ஸில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications