சென்னை புறநகர் ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று 9 மின்சார ரயில்கள் ரத்து.. என்னெல்லாம் தெரியுமா?
சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - திருத்தணி செல்லக்கூடிய மின்சார ரயில்கள் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 9 ரயில்கள் இந்த வழித்தடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை மூர் மார்க்கெட் - அரக்கோணம், சென்னை மூர் மார்க்கெட் - திருத்தணி செல்லக்கூடிய மின்சார ரயில்கள் இன்று (செப்டம்பர் 13) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

அரக்கோணம் -சென்னை மூர் மார்க்கெட், திருத்தணி -சென்னை மூர் மார்க்கெட் உள்ளிட்ட மின்சார ரயில்களும் இன்று முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூர் மார்க்கெட்டில் இருந்து திருப்பதி செல்லும் சிறப்பு மின்சார ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னனென்ன ரயில்கள் ரத்து, எத்தனை மணி வரை ரத்து என்பதையும் தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது. இதன்படி சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே காலை 8.20 மணி முதல் 11 மணி வரையிலும், மறுமாா்க்கமாக அரக்கோணம் - சென்னை சென்ட்ரல் இடையே காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னை சென்ட்ரல் - திருத்தணி இடேயே காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும், மறுமாா்க்கமாக திருத்தணி -- சென்னை சென்ட்ரல் இடையே காலை 10.15 மணிக்கும், பிற்பகல் 12.35 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல்- திருப்பதி இடையே காலை 9.50-க்கு இயக்கப்படும் மெமு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. எனினும் பயணிகளின் வசதிக்காக இந்த தடத்தில் 10 பயணிகள் சிறப்பு ரயில்கள் கடம்பத்தூா் வரை இயக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications