சென்னை பஸ்களில் டிக்கெட் மெஷினில் திடீர் கோளாறு.. பயணிகள் இதை பண்ணாதீங்க.. பறந்த முக்கிய அட்வைஸ்
சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் டிக்கெட் இயந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் யுபிஐ, சென்னை ஓன் செயலி வழியாக தற்காலிகமாக டிக்கெட் எடுக்க முடியாது எனவும் எம்.டி.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் தொழில் நுட்ப கோளாறு சீர் செய்யப்படும் வரை அச்சிடப்பட்ட டிக்கெட் வழங்கப்படும் எனவும் சென்னை எம்.டி.சி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
சென்னை மாநகர பேருந்துகளில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கிறார்கள். அலுவலகங்கள் செல்பவர்கள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தும் முக்கிய போக்குவரத்து அமைப்பாக நகர பேருந்துகளே உள்ளன.

சென்னையை பொறுத்தவரை மின்சார ரயில், மெட்ரோ ரயில் என இல்லாத இடங்களுக்கும் சரி இருக்கும் இடங்களுக்கும் சரி.. அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் மூலமே செல்ல முடியும் என்பதால் நகர பேருந்துகளில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும். சென்னை நகர பேருந்துகளில் தற்போது டிஜிட்டல் முறையில் டிக்கெட் எடுக்கும் வசதி உள்ளது.
நடத்துநர்களிடம் உள்ள டிக்கெட் இயந்திரத்தில் உள்ள கியு ஆர் கோடை ஸ்கேன் செய்து யுபிஐ வழியாக டிக்கெட் எடுக்கலாம். அதேபோல சென்னை ஒன் செயலி வழியாகவும் டிக்கெட் முடியும். இது பயணிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் பயணிகளுக்கு இன்று முக்கிய அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
அதாவது, டிக்கெட் இயந்திரங்களில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் பழையபடி காகிதங்களில் டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயன்படுத்தப்படும் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் (ETM) எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், தற்போது மின்னணு பயணச்சீட்டுகளை வழங்குவதில் தற்காலிகத் தடை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படும் வரை நடத்துனர்கள் மூலமாக காகிதத்திலான கைமுறை (Manual) பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்குவார்கள் என்பதைப் பயணிகள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இக்காலக்கட்டத்தில் UPI, NCMC கார்டுகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது என்பதையும்,
'சென்னை ஒன்' (Chennai One App) செயலி தற்காலிகமாகச் செயல்படாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சிரமத்திற்கு வருந்துவதுடன், தொழில்நுட்பக் குழுவினர் இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பயணிகளின் மேலான ஒத்துழைப்பை நாடுகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications