சென்னை ஏரிகள் எல்லாமே வேறலெவலில் மாறப்போகுது.. சிஎம்டிஏ சூப்பர் முடிவு
சென்னை: சென்னையில் புழல் ஏரி, பெரும்பாக்கம் ஏரி, ரெட்டேரி, முடிச்சூர் ஏரி, மாடம்பாக்கம் ஏரி, செம்பாக்கம் ஏரி, வேளச்சேரி ஏரி, ஆதம்பாக்கம் ஏரி உள்பட 10 ஏரிகளை நீர் விளையாட்டுகள், படகு சவாரி வசதிகள், பூங்காக்கள், சைக்கிள் பாதை, வாடகை சைக்கிள் நிலையம், திறந்த வெளி உடற்பயிற்சி அரங்கம் உள்பட பல்வேறு வசதிகளுடன் மாற்றுவதற்கு சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 925 ஏரிகள் உள்ளன. இந்த அனைத்து ஏரிகளும் கால்வாய்களின் மூலமாக ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. ஒரு ஏரியில் தண்ணீர் நிரம்பினால், கால்வாய் மூலமாக மற்றொரு ஏரிக்குத் தண்ணீர் போகும். அந்த ஏரியும் நிரம்பினால் அங்கிருந்து இன்னொரு ஏரிக்குத் தண்ணீர் செல்கிறது.
அதைத் தொடர்ந்து ஆறுகள், குளங்கள் இருந்தால் அவையும் ஏரிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இப்படியே கடற்பகுதி வரை ஏரிகளும் அதன் கால்வாய்களும் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக 21,464 ஆக்கிரமிப்புகள் நீர்நிலைகளில் உள்ளன. இதனால் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் வெள்ளக்காடாக மாறுகின்றன.

நீர் நிலைகள்
இன்று சென்னையில் பெரும்பாலான ஏரிகளைக் காணவில்லை. அவற்றோடு இணைந்திருந்த கால்வாய்களும் காணாமல் போய்விட்டன. சரி விஷயத்திற்கு வருவோம். சென்னையில் இருக்கும் ஏரிகளை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் நீர் நிலைகளை அழகுபடுத்தி, அதனை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள், நடைபாதைகளுடன் மாற்றி வருகிறது. பல்வேறு நீர்நிலைகளின் கரைகள் சென்னையில் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

100 கோடி ரூபாய்
அதே பாணியில் சென்னை முக்கியமான ஏரிகளை சீரமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் நீர்நிலைத்துறை அமைப்புகளுடன் இணைந்து முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக சென்னையில் உள்ள 10 ஏரிகளை சீரமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. இதன்படி 'ஏரிக்கரை மேம்பாடு' (lake front development) என்ற பெயரில் புதிய திட்டத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏரிகளை மேம்படுத்தப்பட உள்ளது

புழல் ஏரி
என்னென்ன ஏரிக்கள் சீரமைக்கப்பட உள்ளது என்பதை இப்போது பார்ப்போம். பெரும்பாக்கம் ஏரி, ரெட்டேரி, முடிச்சூர் ஏரி, மாடம்பாக்கம் ஏரி, செம்பாக்கம் ஏரி, வேளச்சேரி ஏரி, ஆதம்பாக்கம் ஏரி, அயனம்பாக்கம் ஏரி, கொளத்தூர் ஏரி, புழல் ஏரி ஆகிய 10 ஏரிகள் சீரமைக்கப்பட உள்ளது.

படகு சவாரி
இந்த ஏரிகள் புரனமைக்கப்பட்டு ஏரியைச் சுற்றி நடைபாதை, சைக்கிள் பாதை, வாடகை சைக்கிள் நிலையம், திறந்த வெளி உடற்பயிற்சி அரங்கம், தோட்டம், வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் சிறுவர் விளையாட்டு திடல், திறந்த வெளி தியேட்டர், திறந்த வெளி அரங்கம், நீர் விளையாட்டுகள், மீன் பிடிக்கும் இடம், பறவைகள் பார்க்கும் இடம், மியாவாக்கி காடுகள், படகு சவாரி உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications