சென்னையில் விபச்சாரம் நடத்தி சிக்கிய என்ஜினீயரிங் மாணவி.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்
சென்னையில் விபச்சாரம் தொழில் நடத்திய என்ஜினீயரிங் கல்லூரி மாணவி குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது
சென்னை: சென்னையில் விபசார தொழில் நடத்திய என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கல்லூரி மாணவியுடன் சேர்ந்து அப்பாவி மாணவிகளை விபசாரத்தில் தள்ளிய காதலன் போலீசிடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சென்னை மாநகருக்கு இளம்பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த போலீசார் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
சென்னை மத்திய குற்றப்பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் விபசார தடுப்பு பிரிவு போலீசார் தங்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில் லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை நடத்தி பாலியல் புரோக்கர்களை கைது செய்து வருகிறார்கள்.

சோதனை
சென்னை எழும்பூரில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் விபசாரம் நடப்பதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு 3 இளம்பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம் நடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

காப்பகத்தில் ஓப்படைப்பு
சோதனையில் அங்கு 3 இளம்பெண்களை அடைத்து வைத்து விபசார தொழிலில் ஈடுபடுத்தியது உறுதியானது. அந்த 3 பெண்களையும் போலீசார் மீட்டனர். அங்கு விபசார தொழில் நடத்தியதாக புதுச்சேரியைச் சேர்ந்த பெண் தரகர் ஜெயப்பிரதா (வயது 20), இன்னொரு தரகர் பிரேம்தாஸ் (30) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட இளம்பெண்கள் மூவரும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்கள்.

போலீசார் அதிர்ச்சி
இதனிடையே போலீஸ் கைதான ஜெயப்பிரதா குறித்து நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. சென்னையில் உள்ள பிரபல என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் 3-வது ஆண்டு படிக்கும் மாணவி தான் ஜெயப்பிரதா என்பதும், அவர் கடந்த 3 ஆண்டுகளாக தனது காதலனோடு சேர்ந்து விபசார தொழில் செய்து வந்ததாகவும், தற்போதுதான் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை கேட்டு போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர்.

காதலன் எஸ்கேப்
கல்லூரி மாணவி ஜெயப்பிரதா பணச்செலவுக்காக அப்பாவி கல்லூரி மாணவிகள் பலரையும், விபசாரம் செய்ய வைத்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.இவரது காதலன் போலீஸ் கையில் சிக்காமல் தப்பி ஓடிவிட்டார். அவரை வலைவீசி தேடிவருவதாக போலீசார் தெரிவித்தனர்.
-
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள்












Click it and Unblock the Notifications