கன மழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை
Recommended Video

சென்னை: கனமழை எச்சரிக்கை எதிரொலியால் சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதன் காரணமாக காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அவர் அறிவித்தார்.
சென்னையில் பரவலாக மழை பெய்யும் என்று அவர் கூறியிருந்த நிலையில், இன்று பிற்பகல் முதலே சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் நல்ல மழை வெளுத்து வாங்கியது.
நாளை மழையின் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், சென்னையில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மிலாது நபி காரணமாக நாளை ஏற்கனவே அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது விடுமுறை விடாமல் வகுப்புகளை நடத்த திட்டமிட்டிருந்த தனியார் பள்ளிகளுக்கு கண்டிப்பாக நாளை விடுமுறை அளிக்க வேண்டும், என்பது இந்த உத்தரவின் சாராம்சமாகும்.
இதனிடையே, பல்வேறு கல்லூரிகளில் வரப்பெற்று வேண்டுகோள்படி கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 21 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை அனைத்து தேர்வுகள் ஓத்திவைக்கப்படுகிறது. ஓத்திவைக்கப்பட்ட தேர்வுகள் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் . மேலும் 26ஆம் தேதி முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும் என்று இன்று மாலை பாராதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ஜி. கோபிநாத் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications