சென்னை மழை நீர் வடிகால்.. ககன்தீப் சிங் பேடி போட்ட ஒரே ஆர்டர்.. ஆடிப்போன ஒப்பந்ததாரர்கள்
சென்னை : சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகளில் தொய்வு இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்.
Recommended Video
இதனால் சென்னை மாநகராட்சிக்காக பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததார்கள் ஆடிப்போய் உள்ளார்கள். மழை காலம் நெருங்குகின்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகிறார்கள். உரிய காலத்தில் பணிகளை முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததார்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்

மழை நீர் வடிகால்
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது " மாநகராட்சி மழைநீர் வடிகால் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்நிலைகள் புனரமைப்பு மற்றும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் 15ம் தேதி நடைபெற்றது.

நீர்வழிக் கால்வாய்
இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி பராமரித்து வரும் 2,071 கிமீ நீளமுள்ள 8,835 மழைநீர் வடிகால் கட்டமைப்புகள், 48.80 கிமீ நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

2 லட்சம் அபராதம்
அதன் தொடர்ச்சியாக 3 ஒப்பந்ததாரர்கள், குறித்த காலத்துக்குள் பணிகளை மேற்கொள்ளாமல் காலதாமதம் செய்து வந்தது ஆய்வுக்கூட்டத்தில் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆணையர் எச்சரிக்கை
இனிவரும் காலங்களில் பணிகளில் தொய்வு இருப்பின் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்" இவ்வாறு மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications