தண்டையார்பேட்டை குவாரன்டைன் வீடுகளின் கதவை தட்டிய மாநகராட்சி ஊழியர்.. கதவை திறந்தால்.. செம!
சென்னை: வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு பிரியாணி வழங்கி சென்னை மாநகராட்சி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கத்தை கொண்டு நோயாளிகள் மருத்துவமனைகள், வீடுகளில் தங்கி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். கொரோனா உறுதியானவர்கள் மருத்துவமனைகளிலும், கொரோனா இருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்கள், கொரோனா சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியவர்கள் வீட்டிலும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு வீடுகளில் தங்கி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் மன நல ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த மருத்துவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுடன் பேசிவருகிறார்கள்.

பிறந்தநாள்
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள ஆலோசனை மையத்தை அண்மையில் ஒரு பெண் தொடர்பு கொண்டார். அப்போது அவர் எனக்கு இன்று பிறந்தநாள். ஆனால் நான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் எனக்கு யாருமே வாழ்த்து கூறவில்லை என கவலை தெரிவித்தார்.

3 இளைஞர்கள்
இதையடுத்து அந்த ஆலோசனை மையத்தில் இருந்த அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார்கள். அது போல் சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 இளைஞர்களிடம் மாநகராட்சி ஆலோசனை மையத்திற்கு அழைப்பு வந்தது.

மாநகராட்சி
அப்போது ஊழியர் ஒருவர் அவர்களை எப்படி உள்ளீர்கள், உடல்நலம் எல்லாம் சுகமா என கேட்டுள்ளார். ஆனால் அவர்களோ நாங்கள் நன்றாக சாப்பிட்டே ரொம்ப நாள் ஆகிறது என்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் அவர்களுடைய செல்போனிற்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய மாநகராட்சி ஊழியர், வீட்டுக் கதவை திறக்குமாறு தெரிவித்தார்.

இன்ப அதிர்ச்சி
கதவை திறந்ததும் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. ஆம்.. சூடான பிரியாணிகளையும் மற்ற உணவுகளையும் அவர்களிடம் கொடுத்தார். கொரோனா நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கும் மாநகராட்சியின் மனநல மையம் இவ்வாறு இன்ப அதிர்ச்சியையும் தருவது நெகிழ்ச்சியை அளிப்பதாக அவர்கள் கூறினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications