Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிஎம்டிஏ உறுப்பினர் செயலரை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி.. நேரில் ஆஜரானதால் உத்தரவு வாபஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வழக்கு விசா​ரணைக்​காக நீதி​மன்​றத்​தில் சாட்சி சொல்ல ஆஜரா​காத சிஎம்​டிஏ உறுப்​பினர் செயலரை கைது செய்து ஆஜர்படுத்த சென்னை சிட்டி சிவில் நீதி​மன்றம் உத்​தர​விட்​டிருந்த நிலையில், இந்த உத்தரவை இன்று திரும்பப் பெற்றது.

ரத்​தினச​பாபதி என்​பவர் தனி​யார் கட்​டு​மான நிறு​வனம் உள்​ளிட்ட 4 பேருக்கு எதி​ராக கடந்த 2019 ஆம் ஆண்டு முறையான திட்ட அனு​மதி பெறாமல் கட்​டு​மானப் பணி​களை மேற்கொண்​டுள்​ள​தாகக் கூறி சென்னை ஐகோர்ட் வளாகத்தில் அமைந்துள்ள சென்னை 19-வது கூடு​தல் சிட்டி சிவில் நீதி​மன்றத்தில் வழக்கு தொடர்ந்​தார்.

Chennai Court Withdraws Arrest Order Against CMDA Member Secretary

இந்த வழக்கை விசா​ரித்த கூடு​தல் சிட்டி சிவில் நீதி​மன்ற நீதிபதி ராஜ்கு​மார், இந்த வழக்​கில் தேவைப்​படும் ஆவணங்​களை சமர்ப்பிக்க மனு​தா​ரர் தரப்​பில் கோரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ள​தால், சென்னை பெருநகர வளர்ச்​சிக் குழு​மத்​தின் (சிஎம்​டிஏ) உறுப்பினர் செயலர் நேரில் ஆஜராகி சாட்​சி​யம் அளிக்க வேண்டும் என சம்​மன் பிறப்​பித்து கடந்த ஜூன் மாதம் உத்​தர​விட்​டார்.

ஆனால் அந்த சம்​மனை சிஎம்​டிஏ உறுப்​பினர் செயலர் தரப்​பில் வாங்க மறுத்து விட்​ட​தாக நீதி​மன்ற ஊழியர்​கள் தெரி​வித்​தனர். இதையடுத்து நீதிப​தி ராஜ்குமார், இந்த வழக்​கில் சாட்​சி​யம் அளிக்க வராத சிஎம்​டிஏ உறுப்​பினர் செயலரை கைது செய்து இன்று (ஜூலை 18) நேரில் ஆஜர்​படுத்த நீதி​மன்ற ஊழியர்​களுக்கு உத்தர​விட்டு வி​சா​ரணையை இன்​றைக்​கு தள்​ளி ​வைத்​திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் பிரகாஷ், உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். தொடர்ந்து சி.எம்.டி.ஏ உறுப்பினர் சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, நீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை. நீதிமன்ற உத்தரவின் நகல் தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என்றும், கிடைத்திருந்தால் உரிய பதில் அளிக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்து வழக்கு தொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.

எனவே சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்ற உத்தரவை நீதிமன்றம் திரும்ப பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ராஜ்குமார், கைது உத்தரவை திரும்ப பெற்றுக் கொண்டார். பின்னர் வழக்கு விசாரணையை தள்ளி வைத்து நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+