இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ஆறு சொத்துக்கள் அரசுடைமை... சென்னை கலெக்டர் அறிவிப்பு!
சென்னை: சென்னை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ஆறு சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படுகிறது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக அவர் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நாளை அவர் தமிழகம் வர உள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது சசிகலாவுடன் இளவரசியும் விடுதலை செய்யப்பட்டார். சசிகலாவுடன் இளவரசியும் நாளை சென்னை திரும்ப இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சென்னை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ஆறு சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படுகிறது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா தமிழகம் வர உள்ள நிலையில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுளள்து குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications