சென்னை ஈசிஆரில் விதிமீறிய கட்டிடங்களுக்கு பெரிய சிக்கல்.. செங்கல்பட்டு கலெக்டருக்கு அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடலோர ஒழுங்குமுறை விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் விதிமீறல் கட்டிடங்கள் இருப்பது அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் கடந்த 2 ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம் அளிப்பதாக நீதிபதி கூறினார். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை பகுதியான திருவான்மியூர், நீலாங்கரையை தாண்டி, பனையூர், அக்கரை, முட்டுக்காடு, கேளம்பாக்கம்,மகாபலிபுரம், கூவத்தூர், செங்கல்பட்டு மாவட்டத்தின் கடற்கரை பகுதிகள் மிக நீண்டது. இங்கு ஏராளமான சொகுசு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு எந்த கட்டுமானத்திற்கும் அனுமதி இல்லை.. ஆனால் விதிகளை மீறி சொகுசு விடுதிகள் பல இடங்களில் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடலோர ஒழுங்குமுறை விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது.

அப்போது விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டது.இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பில் எந்தவித அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. அதேவேளையில் விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வக்கீல் கேட்டுக்கொண்டார்.
வழக்கை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், "விதிமீறல் கட்டிடங்கள் இருப்பது அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. எனினும் கடந்த 2 ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.விதிமீறல் கட்டிடங்களை கண்காணிக்க வேண்டியது மாநில கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் கடமை. அப்படி இருக்கும் போது கண்டும் காணாமல் இருப்பது சரியல்ல.செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் விதிகளை மீறி 16 கட்டிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. விதிமீறல் கட்டிடங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கால அவகாசம் வழங்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அதற்கு மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும்.வழக்கு விசாரணை ஆகஸ்டு 1-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அன்றைய விசாரணையின் போது மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர், கலெக்டர் ஆகியோர் காணொலி மூலம் ஆஜராக வேண்டும்" இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications