சென்னை ஈசிஆரில் பெண்களை காரில் துரத்தி அச்சுறுத்தியதாக புகார்! மேலும் 5 பேர் கைது
சென்னை: சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் பயணித்த காரை விரட்டிச் சென்று மிரட்டியதாக கொடுக்கப்பட்ட புகாரில் மேலும் 5 பேர் போலீஸார் கைது செய்துள்ளனர். நேற்றைய தினம் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ஈசிஆர்) காரில் சென்ற பெண்களை வழிமறித்து இளைஞர்கள் அத்துமீறும் வகையில் ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

கடந்த 26 ஆம் தேதி அதிகாலை 3.30மணிக்கு பெண்கள் ஒரு காரில் ஈசிஆரில் வந்து கொண்டிருந்தனராம். அப்போது மற்ற இரு சொகுசு கார்களில் வந்த இளைஞர்கள முட்டுக்காடு அருகே தங்களை வழிமறித்ததாகவும் அப்போது காரை நிறுத்தாமல் வீட்டுக்கு வந்ததாகவும் பெண்கள் புகார் தெரிவித்தனர்.
தங்கள் வீடு வரை அவர்கள் துரத்திக் கொண்டே வந்ததாகவும் அந்த பெண்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் இளைஞர்கள் பயணம் செய்த காரை பெண்கள் பயணித்த கார் இடித்து விட்டதாக பிரச்சினை செய்தனராம். ஆனால் அது போல் தாங்கள் இடிக்கவில்லை என பெண்கள் தெரிவிக்கிறார்கள்.
இதில் யார் மீது தவறு இருக்கிறது என சரியாக தெரியவில்லை. இந்த நிலையில் பெண்களின் வீடியோவை வைத்து பெண்கள் எந்த அளவிற்கு அச்சப்பட்டனர் என்பது தெரிகிறது. இதையடுத்து இந்த விவகாரத்தில் அந்த இளைஞர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதற்காக அந்த வீடியோக்களை ஆய்வு செய்த போது அதில் இளைஞர்களின் முகம் நன்றாக தெரிந்தது. அதை வைத்து போலீஸார் நேற்று அந்த இளைஞர்களின் காரை அடையாளம் கண்டனர். தொடர்ந்து கிழக்கு தாம்பரம் பகுதியிலும் பொத்தேரி பகுதியிலும் காரை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக தனியார் கல்லூரி மாணவன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் இந்த விவகாரம் தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு












Click it and Unblock the Notifications