ஈசிஆர் போறீங்களா? நித்ய கல்யாண பெருமாள் கோயில் இருக்குல்ல? அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது.. செம
சென்னை: நித்ய கல்யாண பெருமாள் கோயில் பற்றின அருமை பெருமை தெரியுமா? இதை பற்றின குட்நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது.. தமிழக இந்துசமய அறநிலையத்துறை, விரைவில் இந்த இனிப்பு செய்தியை அறிவிக்க போகிறது.. என்ன தெரியுமா?
எத்தகைய தோஷத்தினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சரி, ஒருமுறை திருவிடந்தை சென்றுவந்தால், திருமணம் கைகூடும் என்பார்கள்.. நீண்ட காலமாக, கல்யாணமாகாமல் இருப்பவர்களை, இங்கு சென்று வேண்டிகொள்ள சொல்வார்கள்.

மாமல்லபுரம்: மாமல்லபுரம் செல்லும் சாலையில் திருவிடந்தை என்ற திருத்தலம் உள்ளது.. லட்சுமியை தன்னுடைய இடது தோளில் ஏந்தியபடி காட்சி தருகிறார் நித்ய கல்யாணப் பெருமாள்... கைகளை இடப்பக்கம் ஏந்திய திருத்தலம் என்பதால் "திருஇடந்தை" என்று பெயர் வந்ததாம்.. இதுவே திருவிடந்தை என்று மாறிவிட்டதாம்.
இந்த கோயிலுக்கு, திருமணம் ஆகாத ஆண், பெண்கள், குடும்பத்தினருடன் சென்று, பூ மாலையால் சுவாமிக்கு அர்ச்சனை செய்ய கொடுக்க வேண்டும்.. அர்ச்சனை முடித்ததும் அந்த மாலையை தருவார்கள். அதை வாங்கி கழுத்தில் போட்டுக்கொண்டு, கோவிலை 9 முறை வலம் வர வேண்டுமாம்..
கொடிகம்பம்: பிறகு, கொடிக்கம்பம் முன்பு விழுந்து வணங்கி, அந்த மாலையுடன் நேராக வீட்டிற்கு போக வேண்டும். வீட்டு பூஜை அறையில் மாலையை வைத்துவிட வேண்டும்.. திருமணம் முடிந்ததுமே, தம்பதியராக வந்து அந்த மாலையை கோவிலில் சேர்த்துவிட வேண்டும். இதற்காகவே, கோவில் பின்புறம் ஒரு மரம் இருக்கிறதாம்.. இதுதான் காலம் காலமாக நடந்துவரும் பரிகார முறையாகும்.
இப்போது விஷயம் என்னவென்றால், இந்த நித்யகல்யாண பெருமாள் கோயில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும்நிலையில், கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ4.30 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி நிறைவடைய போகிறதாம்..
திருமண மண்டபம்: நித்யகல்யாண பெருமாள் கோயிலுக்கு சொந்தமான, ஈசிஆர் சாலையொட்டி உள்ள 4 ஏக்கர் இடத்தில், திருமண மண்டபம் கட்டப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.. இதையடுத்து, இந்த திருமண மண்டபம் கட்டுவதற்காகவே, இந்து சமய அறநிலைய துறை சார்பில் ரூ4.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 2022ம் ஆண்டு, இந்த மண்டபம் கட்டும் பணியை முதல்வர் ஸ்டாலின் துவக்கியும் வைத்திருந்தார்.
இதையடுத்து, பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், சில நிர்வாக காரணங்களுக்காக பணிகள் தடைபட்டது. இதற்கு பிறகுதான், அமைச்சர் சேகர்பாபு உடனடியாக இதில் தலையிட்டு, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மகிழ்ச்சி: இப்போது, திருமண மண்டபம் கட்டும் பணிகள் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டதாம்.. இன்னும் 2 மாதத்தில், இந்த கல்யாண மண்டபம் பயன்பாட்டுக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள் அதிகாரிகள். இந்த தகவல் பக்தர்களுக்கு பெருத்த மகிழ்ச்சியை தந்துவருகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications