Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மக்கள் கவனத்துக்கு.. நவம்பர் 23 இல் 49 புறநகர் ரயில்கள் ரத்து.. எந்த வழித்தடங்களில் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் முக்கியப் போக்குவரத்தாக உள்ள புறநகர் ரயில் சேவையையே பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் நவம்பர் 23-ஆம் தேதி சென்னையில் 49 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறநகர் மின்சார ரயில் சேவை

சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து சேவையாக புறநகர் மின்சார ரயில் சேவைகள் இருந்து வருகின்றன. சென்னையில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை பிரதானமாக இருக்கும் நிலையில், புறநகர் ரயில் சேவைகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலை செய்வோர் என அனைவருக்கும் பெரிதும் உதவி வருகிறது.

chennai-electric-train-update-49-electric-trains-cancelled-in-chennai-on-nov-23

மின்சார ரயில் சேவை மட்டும் இல்லையென்றால் நிலைமையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு பயணிகளின் போக்குவரத்துக்கு சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை பெரும் பங்காற்றி வருகிறது. சென்னை பயணிகளுக்கு புறநகர் மின்சார ரயில் சேவைகள் என்பது பெரும் வரப்பிரசாதமாகும்.
இந்த ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்புப் பணிகள், பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

பராமரிப்பு பணிகள்

அந்த வகையில், சென்னை - அரக்கோணம் இடையே உள்ள திருநின்றவூா் நிலையப் பணிமனையில் வரும் நவம்பர் 23 ஆம் தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், 49 புற நகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை - அரக்கோணம் இடையேவுள்ள திருநின்றவூா் நிலையப் பணிமனையில் வரும் நவம்பர் 23 ஆம் தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், அந்த நேரங்களில் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 49 புகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

சிறப்பு ரயில்கள் இயக்கம்

அதேநேரம், பயணிகளின் வசதிக்காக நவம்பர் 23 ஆம் தேதி காலை 6.30 மணி முதல் 11 மணி வரை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், திருத்தணி, ஆவடி இடையே 17 பயணிகள் சிறப்பு ரயில்கள் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+