'பெண்கள் விஷயம்'.. சென்னை அதிகாரியை வாழ்நாளில் மறக்க முடியாதபடி பழி வாங்கிய என்ஜினியர் கைது
சென்னை: சென்னையில் உள்ள தனியார் ஆட்டோ மொபைல் நிறுவனம் ஒன்றில் ஆனந்த் என்ற இன்ஜினியர் வேலை செய்து வருகிறார். இவர் தனக்கு அதிக வேலை பளு கொடுத்த உயர் அதிகாரியை பழிக்குப்பழி வாங்குவதற்காக அவரை பற்றி இணையதளத்தில் அவதூறாக பதிவிட்டாராம். பெண்களுடன் தொடர்புபடுத்தி உயர் அதிகாரி குறித்து அவதூறு தகவல்களை பரப்பியதாக இன்ஜினியர் ஆனந்த் கைது செய்யப்பட்டிருக்கிறார்,
சென்னையில் ஐடி நிறுவனங்களை தாண்டி ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. சென்னையின் புறநகர் பகுதிகளில் எண்ணவே முடியாத அளவிற்கு தொழிற்சாலைகள் உள்ளன. சென்னையில் இந்தியாவின் ஆட்டோ மொபைல் தலைநகரம் என்று சொல்லும் அளவிற்கும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி மையத்தின் தலைநகரம் என்று சொல்லும் அளவிற்கும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் எண்ணூர், செங்கல்பட்டு, மறைமலைநகர், உரக்கடம், சுங்குவார்சத்திரம், பூந்தமல்லி, திருவொற்றியூர் என எல்லா பக்கமும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன.

அந்த வகையில் சென்னையில் ஒரு பிரபலமான ஆட்டோ மொபைல் நிறுவனம் ஒன்று இருக்கிறது. இங்கு இன்ஜினியராக 27 வயதாகும் ஆனந்த் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு மேல் அதிகாரியாக முத்துகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். முத்துகிருஷ்ணன் பொறியாளர் ஆனந்துக்கு அதிக வேலை கொடுத்து தொல்லை கொடுத்தாராம். வேலை முடிந்த பிறகு ஆனந்தை வீட்டுக்கு அனுப்பாமல் தனது சொந்த வேலைகளுக்கும் முத்துகிருஷ்ணன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் முத்துகிருஷ்ணன் மீது ஆனந்த் கடும் அதிருப்தியில் இருந்தாராம்.
ஒருகட்டத்தில் முத்துகிருஷ்ணன் மீது கடும் கோபம் கொண்ட பொறியாளர் ஆனந்த், அவரை பழி வாங்குவதற்கு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. முத்துகிருஷ்ணனை பற்றி பெண்களுடன் தொடர்பு படுத்திய அவதூறு தகவல்களை இணையதளங்கள் வாயிலாக ஆனந்த் பரப்பினாராம். தனக்கு எதிராக உண்மைக்கு புறம்பான பெண்கள் மீதான அத்துமீறல் ரீதியான அவதூறு தகவல்கள் பரப்பப்படுவதை கண்டறிந்து முத்துகிருஷ்ணன் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இதுபோன்ற அவதூறு தகவல்களை பரப்புபவர் யார் என்று முத்துகிருஷ்ணனால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அவதூறு தகவல்களை பரப்புபவரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் முத்துகிருஷ்ணன் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணையில் முத்துகிருஷ்ணன் பற்றி இணையதளங்களில் அவதூறு தகவல்களை பரப்பி வருபவர் ஆனந்த் என்பது கண்டறியப்பட்டது. அதன்பேரில் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர். இதுபோல் அவதூறு தகவல்களை பரப்பினால் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
-
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications