Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'பெண்கள் விஷயம்'.. சென்னை அதிகாரியை வாழ்நாளில் மறக்க முடியாதபடி பழி வாங்கிய என்ஜினியர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள தனியார் ஆட்டோ மொபைல் நிறுவனம் ஒன்றில் ஆனந்த் என்ற இன்ஜினியர் வேலை செய்து வருகிறார். இவர் தனக்கு அதிக வேலை பளு கொடுத்த உயர் அதிகாரியை பழிக்குப்பழி வாங்குவதற்காக அவரை பற்றி இணையதளத்தில் அவதூறாக பதிவிட்டாராம். பெண்களுடன் தொடர்புபடுத்தி உயர் அதிகாரி குறித்து அவதூறு தகவல்களை பரப்பியதாக இன்ஜினியர் ஆனந்த் கைது செய்யப்பட்டிருக்கிறார்,

சென்னையில் ஐடி நிறுவனங்களை தாண்டி ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. சென்னையின் புறநகர் பகுதிகளில் எண்ணவே முடியாத அளவிற்கு தொழிற்சாலைகள் உள்ளன. சென்னையில் இந்தியாவின் ஆட்டோ மொபைல் தலைநகரம் என்று சொல்லும் அளவிற்கும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி மையத்தின் தலைநகரம் என்று சொல்லும் அளவிற்கும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் எண்ணூர், செங்கல்பட்டு, மறைமலைநகர், உரக்கடம், சுங்குவார்சத்திரம், பூந்தமல்லி, திருவொற்றியூர் என எல்லா பக்கமும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன.

Chennai Engineer arrested for taking revenge on official in a way he will never forget in his life

அந்த வகையில் சென்னையில் ஒரு பிரபலமான ஆட்டோ மொபைல் நிறுவனம் ஒன்று இருக்கிறது. இங்கு இன்ஜினியராக 27 வயதாகும் ஆனந்த் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு மேல் அதிகாரியாக முத்துகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். முத்துகிருஷ்ணன் பொறியாளர் ஆனந்துக்கு அதிக வேலை கொடுத்து தொல்லை கொடுத்தாராம். வேலை முடிந்த பிறகு ஆனந்தை வீட்டுக்கு அனுப்பாமல் தனது சொந்த வேலைகளுக்கும் முத்துகிருஷ்ணன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் முத்துகிருஷ்ணன் மீது ஆனந்த் கடும் அதிருப்தியில் இருந்தாராம்.

ஒருகட்டத்தில் முத்துகிருஷ்ணன் மீது கடும் கோபம் கொண்ட பொறியாளர் ஆனந்த், அவரை பழி வாங்குவதற்கு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. முத்துகிருஷ்ணனை பற்றி பெண்களுடன் தொடர்பு படுத்திய அவதூறு தகவல்களை இணையதளங்கள் வாயிலாக ஆனந்த் பரப்பினாராம். தனக்கு எதிராக உண்மைக்கு புறம்பான பெண்கள் மீதான அத்துமீறல் ரீதியான அவதூறு தகவல்கள் பரப்பப்படுவதை கண்டறிந்து முத்துகிருஷ்ணன் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுபோன்ற அவதூறு தகவல்களை பரப்புபவர் யார் என்று முத்துகிருஷ்ணனால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அவதூறு தகவல்களை பரப்புபவரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் முத்துகிருஷ்ணன் புகார் அளித்தார்.

போலீஸ் விசாரணையில் முத்துகிருஷ்ணன் பற்றி இணையதளங்களில் அவதூறு தகவல்களை பரப்பி வருபவர் ஆனந்த் என்பது கண்டறியப்பட்டது. அதன்பேரில் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர். இதுபோல் அவதூறு தகவல்களை பரப்பினால் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+