600 பெண்களை.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமுகன்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்!
Recommended Video
சென்னை: வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசி.. 600 பெண்களை.. டிரஸ்ஸை கழற்றுமாறு மிரட்டி.. அவர்களை நிர்வாணமாக்கி.. அதனையும் வீடியோவாக பதிவு செய்து.. லட்சக்கணக்கில் பணம் பறித்த காம வெறி மிருகத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர்தான் ராஜ்செழியன் என்ற பிரதீப். இதனால் நைட் வேலைக்கு போனால் காலையில்தான் திரும்பி வருவார். இவரது மனைவி, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
அவர் வழக்கம்போல் காலையில் வேலைக்கு போய்விட்டு சாயங்காலம் வீட்டுக்கு வருவார். நைட் ஷிப்ட் என்பதால் பிரதீப் பகலில் வீட்டில் தனியாகத்தான் இருப்பார். அப்போது, பெண்களின் செல்போன் நம்பர்களை சேகரித்து அவர்களிடம் தினந்தோறும் பேச ஆரம்பித்தார்.

அழகா இருக்கீங்க
அதில் சில அழகான பெண்கள் தென்பட்டால், அவர்களை ஏமாற்றி பணம் பறிக்கவும் செய்தார். இதற்கு இவருக்கு அர்ச்சனா ஜெகதீஷ் என்ற பெண்ணே உடந்தையாக இருந்தார். "நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. ஸ்டார் ஓட்டலில் வேலை.. லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும்" என்று அர்ச்சனா பேசவும், இளம் பெண்கள் அதில் விழுந்துவிடுவர். இதன்பிறகு பிரதீப்தான் இன்டர்வியூ நடத்துவதுபோல அந்த பெண்களிடம் பேச ஆரம்பிப்பார்.

நிர்வாண படம்
வாட்ஸ்அப் வீடியோ காலில்தான் இந்த இன்டர்வியூ நடக்கும். உங்களுக்கு நல்ல உடல் அமைப்பு இருக்கிறதா, அதை பார்த்துதான் வேலைக்கு எடுக்கலாமா வேணாம்னு சொல்ல முடியும், அதனால உங்க நிர்வாண படத்தை எனக்கு அனுப்பி வைங்க என்று பிரதீப் கேட்க.. லட்சக்கணக்கான சம்பளத்துக்கு ஆசைப்பட்ட பெண்களும் தங்களது நிர்வாண படத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

மிரட்டல்
சில சமயம் வீடியோ கால் மூலமாகவே, டிரஸ்களை கழட்டி உடல் அமைப்பை காட்டும்படி சொல்வாராம். அந்த பெண்களும் அப்படியே செய்திருக்கிறார்கள். இதை எல்லாம் ரெக்கார்ட் செய்து கொண்டு, மீண்டும் அந்த பெண்களிடமே அந்த நிர்வாண படங்களை போட்டு காட்டி, இதை சோஷியல் மீடியாவில் போடாமல் இருக்க வேண்டுமானால், பணம் தேவை என்று மிரட்டுவார்.

600 பெண்கள்
இப்படியே லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார். எத்தனை பெண்கள் தெரியுமா.. கிட்டத்தட்ட 600 பெண்களுக்கு மேல்.. இவர்கள் 16 மாநிலங்களை சேர்ந்தவர்கள். இதில் ஆந்திராவை சேர்ந்த ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டும் சந்தேகம் வந்து, இதை பற்றி விசாரிக்கவும்தான், பிரதீப்பின் கோர முகம் வெளிப்பட்டது.

2000 போட்டோக்கள்
ஐதராபாத் போலீசில் அந்த பெண் புகார் தெரிவிக்க, சென்னையில் பிரதீப்பை கைது செய்தது போலீஸ். அப்போதுதான், பிரதீப்பின் கம்ப்யூட்டர்கள், செல்போன்களை பார்த்து அதிர்ந்து போய்விட்டனர். 2000-க்கும் மேற்பட்ட நிர்வாண போட்டோக்கள், செல்போன், கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமான விசாரணை நடந்து வருகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications