வாடகைத் தாய் சர்ச்சை.. நயன்தாராவுக்கு உதவிய பிரபல மருத்துவமனையில் சுகாதாரத் துறை நாளை விசாரணை
சென்னை: நயன்தாராவுக்கு உதவி செய்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க மருத்துவ அதிகாரிகளிடம் நாளை விசாரணை நடத்தப்படுகிறது.
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் சில சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன. திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்ள தகுதியில்லை அல்லது விருப்பம் இல்லை என்பதை உரிய முறையில் தெரிவித்து இருக்க வேண்டும்.
இந்த நடைமுறைகளுக்கு பொருத்தமான நபர் மட்டுமே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி உண்டு. ஆனால் நடிகை நயன்தாரா விஷயத்தில் இந்த விதிமுறைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அமைச்சர் மா.சு. உத்தரவு
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக அவர் பதில் அளித்தார். இந்த நிலையில் நயன்தாரா வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு உதவி செய்த மருத்துவமனை மற்றும் டாக்டர்கள் மீது அனைவரது பார்வையும் திரும்பியுள்ளது.

இரட்டை குழந்தைகள்
நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் சென்னையில் உள்ள மிகப் பெரிய பிரபல தனியார் மருத்துவமனையில்தான் பிறந்துள்ளன. அந்த மருத்துவமனையில் உள்ள சில மருத்துவர்கள்தான் நயன்தாரா வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் விஷயத்தில் ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

போலீஸார் விசாரணை
எனவே அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார்கள். இந்த விசாரணையின் முடிவில் தனியார் மருத்துவமனையில் விதிகள் ஏதேனும் மீறப்பட்டிருப்பின் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு அந்த முறையின் சட்ட திட்டங்களை முழுமையாக கூற வேண்டியது மருத்துவர்களின் கடமை.

சென்னையின் பிரபல மருத்துவமனை
இது போல் நயன்- விக்கி தம்பதிக்கு பிரபல மருத்துவமனையின் மருத்துவர்கள் விதிமுறைகளையும் சட்டங்களையும் சொன்னார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது போல் அந்த மருத்துவமனையின் டாக்டர்களிடம் நயன்தாரா எப்போது மருத்துவமனைக்கு வந்தார்? வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற எப்போது முன்பதிவு செய்தார், நயன்தாராவுக்கும் வாடகைத் தாய்க்கும் எந்த மாதிரியான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன என்பது குறித்தும் விசாரிக்கப்படும் என தெரிகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications