அஞ்சலையை பார்க்க வந்த ஆற்காடு சுரேஷ்.. கைதாகி ஜாமீன்.. மறுபடியும் இப்ப ஜெயிலில் 1-2-3!
பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்
Recommended Video
சென்னை: "சின்ன வீடு" அஞ்சலையை ரகசியமாக சந்திக்க வந்தபோது கைதாகி, ஜாமீனில் வெளியே வந்தாரே.. பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ்.. அவரை திரும்பவும் போலீஸார் கைது செய்து உள்ளே தூக்கி வைத்துள்ளது!
சென்னை பேசின் பிரிட்ஜ் நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் ஆற்காடு சுரேஷ். 40 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இவர் மீது உள்ளன. பிசினஸ்மேன் முதல், சாமான்ய மக்கள் வரை அவர்களை மிரட்டி பணம் பறிப்பது, தொழிலுக்கு குறுக்கே யார் வந்தாலும் கொலை செய்வது என சகட்டுமேனிக்கு குற்றங்களை செய்து வந்தார்.
இதைதவிர, வக்கீல் பகவத்சிங்கொலை வழக்கு, ரவுடிகள் ராதாகிருஷ்ணன், சின்னா கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் சுரேஷ் மீது நிலுவையில் உள்ளன. இதனால் இந்த புளியந்தோப்பு ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க சென்னை மாநகர கமிஷனர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு சுரேஷ், புளியந்தோப்பு பகுதியில் உள்ள கள்ளக்காதலி அஞ்சலையை பார்க்க ரகசியமாக வந்துபோவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படியே கடந்த ஏப்ரல் மாதம் அஞ்சலை வீட்டுக்கு நடுராத்திரி வந்த சுரேஷை போலீசார் நடுராத்திரி சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
சென்னையில் பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷ் ஆந்திராவில் கூட்டாளி ராஜேஷ் என்பவனுடன் கைது செய்யப்பட்டான். பின்னர் ஜாமீனில் வெளிவந்த ரவுடி சுரேஷ் திரும்பவும் தலைமறைவானார். ஆனால் புளியந்தோப்பு ஸ்டேஷனில் பல வழக்குகள் தொடர்பாக சுரேஷ் கோர்ட்டிலும் ஆஜராகவில்லை. இதனால் அவரை புளியந்தோப்பு போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைக்கவும், தனிப்படை போலீசார் அங்கு சென்று ஆற்காடு சுரேஷையும், கூட்டாளி ராஜேஷையும் கைது செய்தனர். அவர்களிடம் 2 பட்டா கத்தியை பறிமுதல் செய்து, இறுதியில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலும் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications