கேஸ் சிலிண்டர் கிடைக்காதா? சமையல் சிலிண்டர் தந்த ஷாக்.. குடோன்லேயே தண்ணி நிக்குதாமே.. மிரளும் சென்னை
சென்னை: 4வது நாட்களாக சென்னையின் பல இடங்களில் தண்ணீர் வடியாத நிலையில், கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இன்றும்கூட கேஸ் விநியோகம் பரவலாக செய்யப்படவில்லை.. பல சாலைகளில் தண்ணீர் வடியாமலேயே உள்ளதால், சிலிண்டர் விநியோகம் 4வது நாளாக தடைபட்டுள்ளது.

சென்னையில் அடித்த புயல் மழையால், தலைநகரமே தனித்தீவு போல ஆகிவிட்டது.. சாலைகள் எல்லாமே வெள்ளக்காடாக காட்சி தந்தன.. போக்குவரத்து துண்டிக்கப்பட்டன.. ரயில், பஸ் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.. அவசர தேவைக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன.
ரேஷன் கடைகள்: அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து அரசு, தனியார் அலுவலகங்கள், டாஸ்மாக், ரேஷன் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன.. இப்போதுகூட நிறைய கடைகள் திறக்கப்படவில்லை..
மழை நின்றுவிட்டாலும்கூட, இன்னும் மழைநீர் முழுவதுமாக வடியவில்லை.. மழைநீர் அதிகமாக தேங்கி நிற்கும் இடங்களில் கரண்ட் இன்னும் வரவில்லை.. நிறைய பகுதிகளில் மொபைல் சிக்னல் கிடைக்கவில்லை.. இதனால், அவசரத்துக்கு யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல், மீட்பு குழுவினரே திணறிப்போயுள்ளனர்.
மளிகை பொருட்கள்: பொதுமக்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வந்தாலும், பெருமளவு கடைகள் மூடியே உள்ளன... பால், தண்ணீர் பாட்டில், மளிகை, காய்கறி கடைகள் போன்றவை இல்லாமல் தவித்துவருகிறார்கள்.. கோடம்பாக்கத்தில், ஒரு மெழுகுவர்த்தி 110 ரூபாய்க்கு விற்கிறார்களாம்.. அதனால், அந்த பகுதி மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.. தண்ணீர் வடியாமல் வடசென்னை மக்கள், உச்சக்கட்ட ஆத்திரத்தில் இருக்கிறார்களாம்.
இதனிடையே, வீடுகளில் நிறைய பேருக்கு சிலிண்டர் விநியோகமும் செய்ய முடியவில்லை.. சில ஆம்புலன்ஸ்களே, மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் நடுரோட்டில் நீரில் சிக்கி நின்றுவிட்ட நிலையில், கேஸ் வாகனங்களும் இதே நிலைமைதான்.. பல சாலைகளுக்குள் நுழையவே முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது..
கேஸ் சிலிண்டர்: வழக்கமாக, சிலிண்டர் முன்பதிவு செய்ததில் இருந்து, அடுத்த 2 நாட்களுக்குள் வினியோகம் செய்யப்படும்.. ஆனால், சென்னை மற்றும் புறநகரில் செயல்படும் பல ஏஜன்சிகளின் குடோன்களில், மழை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது..
அதனால், குடோன்களில் வைக்கப்பட்டிருந்த, கேஸ் சிலிண்டர்களே நீரில் மிதக்கின்றதாம்.. இதனால் கடந்த 4 நாட்களாக, சிலிண்டர் வினியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சாலைகளில் மழைநீர் வடிந்தாலும், வீடுகளில் மழைநீர் வடிந்தாலும், கேஸ் குடோன்களிலும் நீர் வடிய வேண்டியிருக்கிறது. அதற்கு பிறகு தான் சென்னைவாசிகளுக்கு கேஸ் விநியோகம் செய்யப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications