பெருவெள்ளம்.. சென்னை மக்களே.. குடிநீர் வேண்டுமா? உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெருவெள்ளம் பாதித்த பகுதிகளில் குடிநீர் தேவைப்படுவோருக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. குடிநீர் பெற 1916 மற்றும் 044- 45674567 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வரலாறு காணாத பேரிடரை சந்தித்து இருக்கிறது. லட்சக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. இங்குள்ள மக்களை படகுகள் மூலம் மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

Chennai Flood: Do you want drinking water? Call this number immediately

வேளச்சேரி, மடிப்பாக்கம், தாம்பரம், பள்ளிக்கரணை என பெரும்பாலான பகுதிகளில் தற்போது வரை வெள்ள நீர் வடியவில்லை. சாலைகள் சேதமடைந்ததுடன், சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் பால் மற்றும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பல பகுதிகளில் குடிநீரும், பாலும், உணவும் இன்றி தவித்து வருகின்றனர்.

குடிநீர் தேவைப்படுவோருக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களுக்கான சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பெருநகர குடிநீர்‌ வழங்கல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்று வாரியம்‌ வாயிலாக லாரிகள்‌ மூலம்‌ குடிநீர்‌ விநியோகம்‌ பெற பொதுமக்கள்‌ கட்டணமில்லா தொலைபேசி எண்‌ 1916 மற்றும்‌ 044- 45674567 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்‌. தெருநடைகள்‌, குடிநீர்‌ வாரியத்தின்‌ குடிநீர்த்‌ தொட்டிகள்‌ மற்றும்‌ பொது பயன்பாட்டிற்கு இலவசமாக குடிநீர்‌ வழங்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+