Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை நகை பட்டறையில் சிலிண்டர் வெடித்த விபத்து.. பலி எண்ணிக்கை மேலும் உயர்வு.. சதி வேலை காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் நகைப்​பட்​டறை​யில் கேஸ் கசிந்து சிலிண்டர் வெடித்த விபத்​தில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 வடமாநில தொழிலா​ளர்​கள் அடுத்தடுத்து உயி​ரிழந்​தனர். இதன் காரணமாக பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை சவு​கார்​பேட்​டை, சிங்​கண்​ணன் தெரு​வில், 4 மாடி கட்​டிடத்​தில் நகைப்​பட்​டறை ஒன்று செயல்​பட்டு வந்​தது. கொல்​கத்​தாவைச் சேர்ந்த சுமன் பால் பி சோகித் (35) என்​பவர் இந்த நகைப்​பட்​டறையை நடத்தி வந்​தார். இந்த நகைப் பட்டறையில் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி ஊழியர்கள் நகைகளை உருக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

Chennai cylincer blast accident

உடனடியாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் நகைப்பட்டறை உரிமையாளர் சுமன் பால் உட்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

இதனையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தீ விபத்தில் காயம் அடைந்த நகை பட்டறையின் உரிமையாளர் சுமன் பால் கடந்த 26 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

நகைப்​பட்​டறை ஊழியர்​களான மேற்​கு ​வங்​கத்​தைச் சேர்ந்த அரவிந்த் தாக்​கல் (27), ஜாந்தோ இந்​திரஜித், சிமந்​தோ​மால் (47), ராகேஷ் (26) ஆனந்த் (32), சூரஜ் (25) ஆகிய 6 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்​தது.

இதில், சிமந்​தோ​மால், ராகேஷ், சூரஜ், அரவிந்த் ஆகிய 4 பேர் அடுத்தடுத்து உயி​ரிழந்​தனர். கடந்த மார்ச் 2ஆம் தேதி பட்டறை ஊழியர் சிமந் தோமல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் நேற்று ராகேஷ் என்பவரும், இன்று பட்டறை ஊழியர்களான சூரஜ் தோலே, அரபிந்த் லங்கல் ஆகிய இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. ஜாந்தோ இந்​திரஜித், ஆனந்த் ஆகிய இரு​வருக்​கும் தொடர் சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த தீ விபத்து குறித்து அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சதி வேலையா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+