அப்படியே ஷட்-டவுன் செய்துவிட்டது.. மறுஅறிவிப்பு வரும் வரை.. முதல்வர் போட்ட உத்தரவு.. அதிரும் சென்னை!
சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. யாரும் வெளியே செல்ல கூடாது என்றும் தமிழக அரசு மூலம் சென்னை பகுதி மக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நிவர் புயலின் தாக்கம் சென்னையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சென்னையில் இருக்கும் பல்வேறு பகுதிகளில் தற்போது விடாமல் மழை பெய்து வருகிறது.
நேற்று அதிகாலை தொடங்கி மழை, தற்போது வரை விடாமல் தீவிரமாக பெய்து வருகிறது. நிவர் புயல் காரணமாக சென்னையின் சாலைகள் வெள்ளம் போல காணப்படுகிறது.

காற்று அதிகம்
சென்னையில் சில பகுதிகளில் மழையை விட காற்றுதான் அதிகம் வீசுகிறது. இப்போதே சென்னையில் பல்வேறு பகுதிகளில் காற்றின் வேகம் 70 கிமீக்கும் அதிகமாக இருக்கிறது. இதுவரை சென்னையில் 30க்கும் அதிகமான மரங்கள் விழுந்துள்ளது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிறுத்தம்
இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக மறு அறிவிப்பு வரும்வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாநகர பேருந்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாநகர பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. சாலைகள் எல்லாம் முடங்கி உள்ளதால் பேருந்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

7 மணிக்கு
சென்னையின் நிலவரத்தை பார்த்து பேருந்துகளை நிறுத்தும் உத்தரவை முதல்வர் வெளியிட்டு உள்ளார். நிவர் புயல் காரணமாக சென்னையில் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளது. மறுஅறிவிப்பு வரும்வரை பிரதான சாலைகள் மூடப்படுகிறது. அதேபோல் சென்னையில் மெட்ரோ சேவையும் 7 மணியோடு நிறுத்தப்படுகிறது.

நாளை எப்படி
நாளை மெட்ரோ இயங்குமா என்பது இப்போது தெரிவிக்க முடியாது. நாளை வானிலையை பொறுத்து இது குறித்து முடிவு எடுக்கப்படும். நிவர் புயலால் மொத்தமாக சென்னையில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. சார்ஜ் இல்லாத லேப்டாப் ஷாட் டவுன் ஆவது போல கொரோனா லாக்டவுன் பின் மீண்டும் எழ தொடங்கி சென்னை.. அப்படியே முடங்கி உள்ளது.

மின்சாரம்
சென்னையில் இப்போது பெரும்பாலான இடங்களில் மின்சாரம் இருக்கிறது. ஆனால் இன்னும் சில மணி நேரங்களில் புயல் கரையை கடக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி மின்சாரம் மொத்தமாக துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. சென்னையில் இயல்பு வாழ்க்கை அப்படியே காலியாகிவிட்டது.

மழை
இன்று இரவுதான் உண்மையான மழையே இருக்கிறது. அதனால் அதற்குபின்தான் உண்மையான சேதம் தெரிய வரும். நாளை காலையும் சென்னையில் அதி தீவிர மழை பெய்யும். இதனால் நாளையும் சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்புவது கஷ்டம் என்று கூறுகிறார்கள்.

நீக்கம்
சென்னையில் இருக்கும் ஆபத்தான பேனர்களை அகற்ற வேண்டும் என்றும் கூட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வெளியே வர கூடாது. தேவையில்லாதபொருட்கள் மொட்டை மாடியில் இருந்தால் நீக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.. இதனால் நாளை மதியம் வரை சென்னை முடக்கத்தில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications