முப்படைகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை.. புகார் குழுக்களை உறுதி செய்ய ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: ராணுவம், கடற்படை, விமானப் படைகளிலும், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடைச் சட்டத்தின் கீழ் உள் புகார் குழுகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் உள்ள விமானப்படை கல்லூரியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த பயிற்சி வகுப்புக்கு வந்த விமானப் படை பெண் அதிகாரியை, சக அதிகாரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக, உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் விமானப் படையின் ராணுவ நீதிமன்றம், விசாரணையை துவங்கியது. இந்த விசாரணையில் திருப்தியளிக்காததால் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், விமானப் படைச் சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவரை தங்கள் வசம் ஒப்படைக்க கோரி, விமானப் படை கல்லூரி கமாண்டண்ட் தாக்கல் செய்த மனுவை ஏற்ற கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரை ஒப்படைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதை எதிர்த்து கோவை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா, விமான படைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவுகளையும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி, ராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில் போலீசார் விசாரணையை தொடர அவசியமில்லை எனவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தேவையில்லை எனவும் உத்தரவிட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்டங்கள் கொண்டு வரப்பட்டு, விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில், விமானப் படை பெண் ஒருவர், பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக போராட தைரியம் இல்லாவிட்டால், வேறு யாருக்கு இருக்கும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, ராணுவம், கடற்படை, விமானப் படைகளிலும், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடைச் சட்டத்தின் கீழ் உள் புகார் குழுகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications