Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி..இயக்குனர் ஷங்கர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொகுசு இறக்குமதி காருக்கான நுழைவு வரி செலுத்திவிட்டதாக இயக்குனர் ஷங்கர் தெரிவுத்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அவர் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்தது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஷங்கர், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இருந்து 'ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்' மாடல் சொகுசு காரை இறக்குமதி செய்தார்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்

ரோல்ஸ் ராய்ஸ் கார்

சென்னை கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காரை பதிவுசெய்ய சென்றபோது, வணிக வரித் துறையிடம் நுழைவு வரி செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து ஷங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது நீதிமாற்றம் 15 சதவீத நுழைவு வரியை செலுத்தி விட்டு, வாகனத்தை பதிவு செய்துகொள்ள உத்தரவிடப்பட்டது.

வழக்கு முடித்து வைப்பு

வழக்கு முடித்து வைப்பு

அதன்படி குறிப்பிட்ட தொகையை செலுத்தி காரை பதிவு செய்து ஷங்கர் பயன்படுததி வருகிறார். இந்த் நிலையில் ஷங்கர் தொடர்ந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஷங்கர் தரப்பில், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, நுழைவு வரி செலுத்தும்படி 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதால், பாக்கித் தொகை 37 லட்சத்து 40 ஆயிரத்து 979 ரூபாயை அதே அண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி செலுத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

வழக்கு விவரம்

வழக்கு விவரம்

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.இதற்கிடையில், இறக்குமதி கார்களுக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளின் விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வணிக வரித்துறை ஆணையருக்கு நேற்று உத்தரவிட்டதன்படி, வழக்குகளின் விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்களா என அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி தகவல் கோரினார்.

விரைவில் அறிக்கை

விரைவில் அறிக்கை

அதற்கு விளக்கம் அளித்த அரசு வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவிற்குபின் வணிக வரித்துறை உதவி ஆணையர்களை இணைந்து வாட்ஸ் அப்பில் ஒரு குழு தொடங்கி, அதன்மூலம் விவரங்களை சேகரித்து வருவதாக தெரிவித்தார். தமிழ்நாடு வணிக வரித்துறை ஆணையர் தற்போது கோவையில் கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் சற்று கால தாமதம் ஏற்படுவதாகவும், உதவி உதவி ஆணையர்களிடம் தகவல் பெற்றவுடன், விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+