மின் வாரிய அதிகாரிக்கு எதிரான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய வழக்கில் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமைப் பொறியாளருக்கு எதிரான ஊழல் புகாரை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில் சி.பி.ஐ. மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலத்தை சேர்ந்த கே.ராஜீ தாக்கல் செய்த மனுவில், கடந்த 2008 ம் ஆண்டு திருச்சி மாவட்ட மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாளராக சேர்ந்து அதே துறையில்,கள உதவியாளராக பதவி உயர்வைப் பெற்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன்.

திருச்சி மாவட்டத் தலைமைப் பொறியாளராக உள்ள வளர்மதி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக கைவிடப்பட்ட நிலங்களை அபகரித்து பினாமி பெயரில் ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்.
இந்நிலையில், தமிழகத்தை கடுமையாக பாதித்த "தானே, வர்தா, ஒக்கி, கஜா" புயல் பாதிப்பின் போது, மின்தடம் சீரமைப்பு பணிகளில் திருச்சி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மின்தடம் சீரமைப்பு பணிக்காக மத்திய-மாநில அரசுகள் ஒதுக்கிய கோடிக்கணக்கான ரூபாயில், ஒப்பந்த ஊழியருக்கு தினமும் 1000 ரூபாய் சம்பளம் என நிர்ணயித்து, அதற்கும் குறைவாகவே வழங்கப்பட்டது.
மேலும், நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளுவதில் 3ல் 1 பங்கு கமிஷனாக பல்வேறு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது. வளர்மதியின் மகன் விக்னேஷை ஒப்பந்ததாரராக நியமித்தும் ஊழலில் ஈடுபட்டுள்ளார். தவறுகளை தட்டிக்கேட்கும் அதிகாரிகளை பணி இடைநீக்கம் மற்றும் பணியிடமாற்றம் செய்து வருகிறார்.
அதனால், இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரித்தால் நேர்மையாக இருக்காது என்பதால், வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்ற தனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியன், 4 வாரத்தில் சி.பி.ஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications