வழக்கறிஞர்கள் தாக்குதல்.. அறிக்கை தாக்கல் செய்ய போலீஸுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தனியார் தங்கும் விடுதியில் வழக்கறிஞர்கள் நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெரிய மேட்டில் முகமது இஸ்மாயில் கான் என்பவருக்கு சொந்தமான விடுதியை குத்தகைக்கு எடுத்து, சுமார் 60 லட்சம் செலவு செய்து மரகபா பேலஸ் என்ற 33 அறைகள் கொண்ட தங்கும் விடுதியை அப்துல் ஜப்பார் என்பவர் நடத்தி வருகிறார்.

தங்கும் விடுதி சிறப்பாக செயல்பட்டு வருவதால், ஒப்பந்தப்படி குத்தகை விட்டவர்களுக்கு மாதம் மாதம் பங்கு தொகையில் பாதியையும் அப்துல் ஜப்பார் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் விடுதியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி மிரட்டி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 7 ம் தேதி திடீரென விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த வழக்கறிஞர்கள் 5 பேர் அங்கிருந்த பொருட்கள் மற்றும் சிசிடிவியை அடித்து நொறுக்கியதோடு, அப்துல் ஜப்பாரையும் தாக்கி விடுதியில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து, விடுதிக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அப்துல் ஜப்பார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், பொங்கியப்பன் அமர்வு, இச்சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் 2 நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications