நடிகை குட்டி பத்மினிக்கு எதிரான நில மோசடி வழக்கு! ரத்து செய்த ஹைகோர்ட்
சென்னை: போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடி செய்ததாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குட்டி பத்மினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. ரூ 8 கோடி மோசடி செய்ததாக புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சென்னை மடிப்பாக்கத்தில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான ரூ 8 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபு பாஷாவின் மனைவி இம்ரானாவுக்கு குட்டி பத்மினி விற்றதாக புகார்கள் எழுந்தன.

இது குறித்து 2011 ஆம் ஆண்டு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின்படி மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகை குட்டி பத்மினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், நிலத்தின் உரிமை கோரி புகார்தாரர் தரப்பில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உரிமையியல் தொடர்பான இந்த பிரச்சினைக்கு குற்றவியல் வர்ணம் பூச முடியாது என கூறி நடிகை குட்டி பத்மினிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications