தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய மாஃபா பாண்டியராஜனின் மனு தள்ளுபடி.. சென்னை ஹைகோர்ட் அதிரடி
தனது தேர்தல் வெற்றிக்கு எதிராக போடப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் மனு சென்னை ஹைகோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: தனது தேர்தல் வெற்றிக்கு எதிராக போடப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் மனு சென்னை ஹைகோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்ட மன்றத்திற்கு பொதுத்தேர்தல் நடந்தது. இதில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜன் வெற்றிபெற்றார்.

திமுக வேட்பாளர் நாசர் தோல்வியை தழுவினார். வெறும் 1,395 வாக்குகள் வித்தியாசத்தில்தான் மாஃபா பாண்டியராஜன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதில் முறைகேடு நடந்து இருப்பதாக திமுக வேட்பாளர் நாசர், மாஃபா பாண்டியராஜன் வெற்றியை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் தனது வெற்றிக்கு எதிராக போடப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தனக்கெதிரான குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லை என்று கூறி சென்னை ஹைகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
சென்னை ஹைகோர்ட் நீதிபதி முரளிதரன் முன்பான அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, மாஃபா பாண்டியராஜனின் மனுவை ஏற்க முடியாது, அவருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள தேர்தல் புகாரில் முகாந்திரம் உள்ளது, அதனால் தேர்தல் வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது என்று நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.
இதனால் தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய மாஃபா பாண்டியராஜனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. திமுக வேட்பாளர் நாசர் தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை நவம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications